மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 14 ஜனவரி, 2012

வெற்றிகளும் , விருதுகளும்


 

            
                                           உழவன் வாழ்க  

   வான் அழ  மண் சிரிக்கும் ,
   மண்  செழிக்க  மனு  சிறக்கும்  !
   ஊன்  தர  உழவு  செய்யும் ,
   நான் போற்றும்  நல்    உழவன்  வாழ்க  !
   மழையில்   நனைந்து ,
   வெயிலில் உலர்ந்த போதும் ,
   கூன்  விழுந்து , குடல்  சிறுத்து , வறுமை
   குப்புறத்  தள்ளிய போதும் ,
   தேகம்   உருக்கி , த்யாகம்  நிகழ்த்தி ,
   முப் போகம்  பெருக்கிடும்  தமிழா
   இவ் வுலகம்  உய்யுது  உன்னத மிக்க
   உயரிய தொழிலாம்  உன்தன்  உழவால் !
   உழவனும் ,தமிழனும்  ஒன்று  ! இதை
   உலகம்  உறக்கச்  சொல்லனும்  என்று
   உழவுக்கான  தொழிலுக்கே  வந்தனை  செய்வோம் ,
   உழவற்ற  தேசத்தை  நிந்தனை  செய்வோம் !

             வெற்றிகளும் ,    விருதுகளும் 
            விழாக்களாய்   வியாபித்திருக்கும்  சமூகத்தில் 
             வலிகளையும் , வடுக்களையும்  சுமந்து கொண்டு 
             வாய்க்காலும் , வரப்புமாய்   வகைப்படுத்தி , 
             வயல் வெளியெங்கும்   வாழ்வாதாரப் படுத்தும் 
             வண்ணத்தமிழ்    உழவன்  
             விண்ணைத்தொடும்  சிறப்புடன்                     
              வாழ்க !வாழ்க!! வாழ்கவே !!!
                எனச் சூளுரைக்கும் பிறைத்தமிழனின் 
                உலகனைத்  தமிழர்களுக்கு உளமார்ந்த , 
                உழவர்  திருநாள்  வாழ்த்துக்கள் !!!
-------------------------------------------------------------------------------------           

                          இவன்  >  >> பிறைத்தமிழன்                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக