மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 1 அக்டோபர், 2011

" உன்னைச் சுமந்த கால்"

 உன்னைச் சுமந்த கால் 
        கடந்து வந்த பாதையை  
        கருத்தில் கொள்ளாதவனுக்கு ,
        செல்ல  வேண்டிய   பாதை  

        சிந்தையில்  நிற்காது ! 

        உன்னைச் சுமந்த கால்களையே 

        சுமக்க  இயலாதபோது ,
        நீ சுமந்த பாவத்தை  

       பிறர்  தலையில்  சுமத்தாதே  !
       உண்மையை   நேசிக்கின்ற
       ஒழுக்கவாதியும் ,
       சில்லறையை  நேசிக்கின்ற  

       செல்வந்தனும்   ஒன்றல்ல !
 
       உடலை  நேசிக்கின்ற  

       ஒப்பனைவாதியும் ,
       உழைப்பை  நேசித்து  

       உயர்வைத் தொட்டவனும்  ஒன்றல்ல !

       உறவுகளை   நேசித்து   

       உயிராய்   மதிப்பவனும்  ,
       உணவை  நேசித்து  

       உறக்கத்தில்  ஆழ்பவனும்  ஒன்றல்ல !

       மாறாத  உண்மை  நிகழ்கின்ற

       மரணம்  சம்பவிக்கும்  நாளன்று ,
       மனிதனைத்  தின்ன  மண் உண்டு  அவன்
       மனசாச்சியை  தின்ன என்ன உண்டு  ?

 
       பிறைத்தமிழன்  பேச்சின் பொருள்கொண்டு !
       பேதங்கள் நீங்கும்  வழிகண்டு !
       பேருவகை கொள்வோம்  
       பிணி வென்று  .............. !!!!!
==================================================
       இவன்  >>> பிறைத் தமிழன் <<< :~----

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக