கடந்து வந்த பாதையை
கருத்தில் கொள்ளாதவனுக்கு ,
செல்ல வேண்டிய பாதை
சிந்தையில் நிற்காது !
உன்னைச் சுமந்த கால்களையே
சுமக்க இயலாதபோது ,
நீ சுமந்த பாவத்தை
பிறர் தலையில் சுமத்தாதே !
கருத்தில் கொள்ளாதவனுக்கு ,
செல்ல வேண்டிய பாதை
சிந்தையில் நிற்காது !
உன்னைச் சுமந்த கால்களையே
சுமக்க இயலாதபோது ,
நீ சுமந்த பாவத்தை
பிறர் தலையில் சுமத்தாதே !
உண்மையை நேசிக்கின்ற
ஒழுக்கவாதியும் ,
சில்லறையை நேசிக்கின்ற
செல்வந்தனும் ஒன்றல்ல !
உடலை நேசிக்கின்ற
ஒப்பனைவாதியும் ,
உழைப்பை நேசித்து
உயர்வைத் தொட்டவனும் ஒன்றல்ல !
உறவுகளை நேசித்து
உயிராய் மதிப்பவனும் ,
உணவை நேசித்து
உறக்கத்தில் ஆழ்பவனும் ஒன்றல்ல !
மாறாத உண்மை நிகழ்கின்ற
மரணம் சம்பவிக்கும் நாளன்று ,
மனிதனைத் தின்ன மண் உண்டு அவன்
மனசாச்சியை தின்ன என்ன உண்டு ?
பிறைத்தமிழன் பேச்சின் பொருள்கொண்டு !
பேதங்கள் நீங்கும் வழிகண்டு !
ஒழுக்கவாதியும் ,
சில்லறையை நேசிக்கின்ற
செல்வந்தனும் ஒன்றல்ல !
உடலை நேசிக்கின்ற
ஒப்பனைவாதியும் ,
உழைப்பை நேசித்து
உயர்வைத் தொட்டவனும் ஒன்றல்ல !
உறவுகளை நேசித்து
உயிராய் மதிப்பவனும் ,
உணவை நேசித்து
உறக்கத்தில் ஆழ்பவனும் ஒன்றல்ல !
மாறாத உண்மை நிகழ்கின்ற
மரணம் சம்பவிக்கும் நாளன்று ,
மனிதனைத் தின்ன மண் உண்டு அவன்
மனசாச்சியை தின்ன என்ன உண்டு ?
பிறைத்தமிழன் பேச்சின் பொருள்கொண்டு !
பேதங்கள் நீங்கும் வழிகண்டு !
பேருவகை கொள்வோம்
பிணி வென்று .............. !!!!!
==================================================
இவன் >>> பிறைத் தமிழன் <<< :~----
பிணி வென்று .............. !!!!!
==================================================
இவன் >>> பிறைத் தமிழன் <<< :~----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக