வான் அழ மண் சிரிக்கும் ,
மண் செழிக்க மனு சிறக்கும் !
ஊன் தர உழவு செய்யும் ,
நான் போற்றும் நல் உழவன் வாழ்க !
மழையில் நனைந்து ,
வெயிலில் உலர்ந்த போதும் ,
கூன் விழுந்து , குடல் சிறுத்து , வறுமை
குப்புறத் தள்ளிய போதும் ,
தேகம் உருக்கி , த்யாகம் நிகழ்த்தி ,
முப் போகம் பெருக்கிடும் தமிழா
இவ் வுலகம் உய்யுது உன்னத மிக்க
உயரிய தொழிலாம் உன்தன் உழவால் !
உழவனும் ,தமிழனும் ஒன்று ! இதை
உலகம் உறக்கச் சொல்லனும் என்று
உழவுக்கான தொழிலுக்கே வந்தனை செய்வோம் ,
உழவற்ற தேசத்தை நிந்தனை செய்வோம் !
வெற்றிகளும் , விருதுகளும்
விழாக்களாய் வியாபித்திருக்கும் சமூகத்தில்
வலிகளையும் , வடுக்களையும் சுமந்து கொண்டு
வாய்க்காலும் , வரப்புமாய் வகைப்படுத்தி ,
வயல் வெளியெங்கும் வாழ்வாதாரப் படுத்தும்
வண்ணத்தமிழ் உழவன்
விண்ணைத்தொடும் சிறப்புடன்
வாழ்க !வாழ்க!! வாழ்கவே !!!
எனச் சூளுரைக்கும் பிறைத்தமிழனின்
உலகனைத் தமிழர்களுக்கு உளமார்ந்த ,
உழவர் திருநாள் வாழ்த்துக்கள் !!!
-------------------------------------------------------------------------------------
இவன் > >> பிறைத்தமிழன்
உலகனைத் தமிழர்களுக்கு உளமார்ந்த ,
உழவர் திருநாள் வாழ்த்துக்கள் !!!
-------------------------------------------------------------------------------------
இவன் > >> பிறைத்தமிழன்