மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 31 டிசம்பர், 2011

* உணர்வை கூர் தீட்டி *


   இயற்கைப்  பேரிடர்  அற்ற 
   இரண்டாயிரத்துப்  பன்னிரண்டு
   இனிதே  துவங்கட்டும்  ! 
   இகத்திலுள்ள  எல்லா  உயிர்களும்
   இன்புற்று  வாழட்டும்  !! 
                         உறக்கம்  திரையிட்டு  
                         உணர்வை  கூர் தீட்டி
   இரும்புத்  தடம் பதித்து  எழுந்து வரும்  

   இளைஞர்களால்
   இந்திய  தேசம்  ஈடு  

   இணையற்று  ஒளிரட்டும்  !!! 
                      என்றெண்ணிய  பிறைத்தமிழனின்  
   இனிய
                       புத்தாண்டு  நல்  வாழ்த்துக்கள்  .... 
-------------------------------------------------------------------------------
    இவன் >>  >> பிறைத்தமிழன்

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

டிசம்பர் " 26 " 2004



கண்ணீர் வடு

சொல்லாமல் தாக்கிய சுனாமி பேரலையே..நீ
கொல்லாமல் விட்டு சென்றது  
கொடுமை மிகு நினைவுகளே !
கோடிக்கரம்..தொட்டு துடைத்திட்ட போதிலும், 
விழி வடித்த கண்ணீர் வடு பெற்றுப்போனதே ! 
கோட்டை கொத்தளங்கள் ..கொட்டி சாய்ந்தாலும், 
ஓட்டை உடைசல்கள் ..உயிர் வாழ போதுமே !
ஆண்டுதோறும்  மீண்டும் ,மீண்டும் 
நினைவுறா  வரம் வேண்டி !
இனி ஒரு இருபத்தாறு இல்லாத டிசம்பராய்,
தனி ஒரு தினசரி தயார் செய் மானிடனே ! 
உயிரற்ற மனிதக்குவியலை 
ஒற்றைச்ச்சமாதியிட்ட, ஓங்கார பேரலையே ! 
உனக்கு கட்டளையிட்டவனே.. 
எங்கள் கண்ணீரை துடைக்க வேண்டும் !
அடைக்கலம் புக வழியில்லை ! 
ஆலயங்கள் போத வில்லை ! 
ஆகாயம்  பார்த்தும் பயனில்லை !
ஆறா துயரின்னும் தீரவில்லை !
இனிய வருடம் தொடங்க வேண்டும் !
இன்பம் இதயத்தை வருட வேண்டும் !
இறைவனே ...உன் துணை வேண்டும்  ! 
என நனைந்த  இமைகளுடன் ,
நான் >> பிறைத்தமிழன் ...


ஞாயிறு, 6 நவம்பர், 2011

இரத்தமோ ,மாமிசமோ ,


பசி ,உறக்கம்  அற்றவனும் ,
பால்  பாகுபாடுகளுக்கு  
அப்பார்ப்பட்டவனும்
யாரையும்  பெறாத ,
யாராலும்  பெற்றெடுக்கப்  படாத  
தனித்தவனும் ,எத் தேவையும்  அற்றவனும் ,
எல்லோருடைய  தேவைகளையும்
பூர்த்தி  செய்பவனும்  ஆகிய 
எல்லாம்  வல்ல  அல்லாஹ்வுக்கு
நாம் அறுத்து  பலியிடும்  
பிராணியின்   இரத்தமோ ,
மாமிசமோ  சென்றடைவதுமில்லை ,
அதன் மீது  இறைவனுக்கு  
எத் தேவையுமில்லை ! 
இதன்மூலம்  மனிதனின் உள்ளம்  
தியாகத்தை  உணரவும் ,
தியாகங்கள்  செய்யவும் ,
தியாக  நாளை  நினைவு  கூறவுமே !
மீண்டும்  ஒருமுறை  இவ்வுலகம்  
கட்டமைக்கப்பட்டு  அதில்..மனித  இனம்  
தோற்றுவிக்கப்ப்படுமாயின்  அப்போதும்..
நிலைத்து  நிற்கும்  தியாகம்  
நிகழ்ந்த  நாள்  இன்று !இப்ராஹீம்  நபியின்  
கடினமிக்க   இச்செயலை ..
கருணை  மிக்க  இறைவனால்..
ஏற்றுக்கொள்ளப்பட்ட  நாள்  இன்று !
மனித  இனம்  உள்ள வரை  
மாறாது  நிலைத்திருக்கும் !
அளப்பரிய  தியாகத்தை  
நினைவு கூறும்  மக்களுக்கு ,
என்  இதயம்  கனிந்த  
தியாகத்திருநாள்  வாழ்த்துக்கள் !!!
--------------------------------------------------------------------------------------
இவன்  >>  >> பிறைத்தமிழன்
 

சனி, 1 அக்டோபர், 2011

" உன்னைச் சுமந்த கால்"

 உன்னைச் சுமந்த கால் 
        கடந்து வந்த பாதையை  
        கருத்தில் கொள்ளாதவனுக்கு ,
        செல்ல  வேண்டிய   பாதை  

        சிந்தையில்  நிற்காது ! 

        உன்னைச் சுமந்த கால்களையே 

        சுமக்க  இயலாதபோது ,
        நீ சுமந்த பாவத்தை  

       பிறர்  தலையில்  சுமத்தாதே  !
       உண்மையை   நேசிக்கின்ற
       ஒழுக்கவாதியும் ,
       சில்லறையை  நேசிக்கின்ற  

       செல்வந்தனும்   ஒன்றல்ல !
 
       உடலை  நேசிக்கின்ற  

       ஒப்பனைவாதியும் ,
       உழைப்பை  நேசித்து  

       உயர்வைத் தொட்டவனும்  ஒன்றல்ல !

       உறவுகளை   நேசித்து   

       உயிராய்   மதிப்பவனும்  ,
       உணவை  நேசித்து  

       உறக்கத்தில்  ஆழ்பவனும்  ஒன்றல்ல !

       மாறாத  உண்மை  நிகழ்கின்ற

       மரணம்  சம்பவிக்கும்  நாளன்று ,
       மனிதனைத்  தின்ன  மண் உண்டு  அவன்
       மனசாச்சியை  தின்ன என்ன உண்டு  ?

 
       பிறைத்தமிழன்  பேச்சின் பொருள்கொண்டு !
       பேதங்கள் நீங்கும்  வழிகண்டு !
       பேருவகை கொள்வோம்  
       பிணி வென்று  .............. !!!!!
==================================================
       இவன்  >>> பிறைத் தமிழன் <<< :~----

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

காணிக்கையாக்குகிறேன்



           இகத்தோர்யாவருக்கும்                       
  1, ஓரறிவுள்ள  தாதுக்களுக்கும் ,

  2,ஈர றிவுள்ள  தாவரங்களுக்கும் , 

  3,மூன்றரிவுள்ள ஊர்வன்க்களுக்கும் ,

  4,நான்கறிவுள்ள  பறவைகளுக்கும் ,
               5,ஐந்தறிவு ள்ள மிருகங்களுக்கும்
   6, ஆரறிவுள்ள  மனிதர்களுக்கும் ,
  எவன்இறைவனோ.......!
  அவனையே துதித்தவனாக ......!
  இகத்தோர்  யாவர்க்கும் 
  இதயம் கனிந்த  ஈகைத்திருநாள் 
  வாழ்த்துக்களை                       
  காணிக்கை யாக்குகிறேன்...............!   ====================================================
                                       இவன் >>>  பிறைத்தமிழன்

சனி, 27 ஆகஸ்ட், 2011

" ஈகை நிறைந்த இதயத்தால் "


ஓசை  மிகு  உலகிலே     
ஆசை  நிறை  மனிதனின்  

மாறா என்றும்   உறவுகள்     
மறக்க  வொன்னா  நினைவுடன்  

மாநபியின்  வழியினில் 
மகத்துவமிக்க  நோன்பினால்  
      
வானவர்கள்  சோபனம்  
வந்திறங்கும்   இரவது  
                                                           
                                      
வாய்க்கப்பெற்ற   மாதமாம்
வண்ணமிகு  ரமளானும்

வந்ததுபோல்  சென்றதே 
வல்லோனின்   கொடை  யதே 
                       
மாநபியின்   வழியிலே  
மகோன்னத   மா   மறையினால் 

மனிதன்   பெற்ற   படிப் பிணை
மா  நிலமெங்கும்  நிலைக்கவே

ஈகை  நிறைந்த   இதயத்தால் 
                                              ஈந்து  சேவை செய்யவதில்                                                                              
இகம்  சிறக்க   வேண்டுமாய் 
இறையோனை  வேண்டினேன்  
                                                                                                              
முகமன்   கூறி   முதலிலே
முழு மையான  மனதுடனே


அருளாளன்    கருணையினால்
அகம்   மகிழ்ந்த   நிலையிலே 

ஆனந்தக்   களிப்பிலே
அரவணைத்து  அன்பொழுக 

அனைவருக்கும்   உறைத்திடுவோம்
அழகிய  பெருநாள்    வாழ்த்  ததை
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
பிறைத்தமிழனின்   பிரியம்    நிறைந்த 
நோன்புப் பெருநாள்  வாழ்த்துக்கள் !
-------------------------------------------------------------------
இவன்   >>  >>  பிறைத்தமிழன்

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

உழவன் சேற்றிலே கால் வைப்பது


நிலம் உழுது  நெல் விதைத்து 

அகம் மகிழ்ந்து  அகிலம்  வாழ ,
அறுவடைகள் செய்து தந்த   உழவன் !

கால்நடை களோடு  கடமை  பேசி ,
வாய்கால்  வெட்டி ,வரப்பு வெட்டி ,
நீர்பாய்ச்சி ,  இலக்கம்  தவறா 

ஏர் ஓட்டி , நாத்து நட்டு ,களை பறித்து ,
உரமிட்டு, மருந்தெளித்து ,
பருவம்   பார்த்து   கதிரறுத்து ,

கட்டு  கட்டி ,  களம்  சேர்த்து 
காலமெல்லாம்   கவிதையாய்
கலனி  எங்கும்   வளம் வந்த 

உன்னதமிக்க   உழவன்  எங்கே ?

காணி  நிலத்தையும்   காசு பார்க்க
கல் ஊன்றி , நூல் பிடித்து ,மாடி கட்ட

தனை வளர்த்த  தன்னலமற்ற  பூமியை
தாரை  வார்த்தான்  உழவன்  இங்கே...  ஏன் ?

ஏன் என்ற கேள்விக்கு ஏற்றம் செய்யும்
ஏர் உழவன் பதில் ஒரு வேலை  ஏற்ப்புடையதோ ?
                                   ஆம்
ஏழை விவசாயி  எத்தனை  நாளைக்கு
எலிக்கறி  தின்பான்  ?

நான்  உழைத்து ,  தான் விதைத்து
நல்ல பலனை  நாடே உன்ன ,

கூன்   விழுந்து , குடல்  சிறுத்து ,
குப்புறத்தள்ளி   என்னை

கூடி நின்று  கொல்லென்று ,
சிரிக்குதே  கொடும் வறுமை  !

வெள்ளைத்துணி ,நல்லசோரும் ,
கடைத்தெருவில்  கைவீசி  
 கைபேசி  சகிதமாய்   நடக்க    
எனக்கில்லையா  ஆசை ?
வீடு   கட்ட   விளைநிலம் ,
விலைபேசி  விற்க வேண்டிய தேவை

உழவன் சேற்றிலே  கால் வைப்பது
உலகம்  சோற்றிலே  கை வைக்கவாம்

இது யார் போட்ட ஒப்பந்தம் ?

சேற்றை   கழுவும்   விவசாயி !
சேர்ந்து   வைக்கும்   ஒப்பாரி  !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒருசில  பகுதியை சேர்ந்தவர்கள் இன்றளவும்  
எலிக்கறி உண்ணுவதை வழமையாக கொண்டவர்கள் தவிர
எந்த விவசாயும்வறுமை  தாளாமல் எலிக்கறி  உண்பதில்லை !

விவசாயிகளுக்கு  எத்தனையோ  சலுகைகளை 
போட்டிபோட்டுக்கொண்டு வருகின்ற அரசுகள் செய்கிறது

நான்கு ரூபாய்க்கு நெல்லை வாங்கிக்கொண்டு
ஒரு ரூபாய்க்கு அறிசிதருகிறது  இது சலுகையில்லையா ?

கடன்களையெல்லாம் ரத்து செய்கிறது 
இது சலுகையில்லையா ?

மின்சாரம் இலவசமாக தருகிறது 
இது சலுகையில்லையா ?

புல் மண்டி ,புதர் மண்டி கிடக்கும் குப்பை மேட்டையும்
ஏக்கர்களாய்  கணக்கு காட்டி இயற்ர்க்கைப் பேரழிவு க்கான
அரசு தரும் பணத்தை விவசாயி எனும் போர்வையில்
வாங்குகிறாயே  இது சலுகையில்லையா ?

விவசாயப் பொருள்களை குறைந்த விலையில் ,
சுலபத்தவணையில்  தருகிறது  இது சலுகையில்லையா  ?

இப்படி எல்லா சலுகைகளையும் பெற்றுக்கொண்டு
பெரிய நகரங்களுக்கு அருகில் உள்ள விவசாயிகள்
வீடு கட்ட விளைநிலத்தை தாரைவார்த்துவிட்டு
தருகின்ற  வியாக்கியானமோ 

ஏழைவிவசாயி  எத்தனை நாளைக்கு எலிக்கறி  தின்பானாம் 
 இவர்கள் சலுகைக்காக சாதூர்யம் பேசும் சந்தர்ப்பவாதிகள் !
_______________________________________________________________________
உண்மை விவசாயி , 
உழவை  தொழிலாக்கி , 
தன்னலம்  கருதாது
உழைப்பை  களமிறக்கி , 
விதையை  பயிராக்கி , 
வியர்வை  உரமிட்டு ,
விளைச்சளை   பெருகின்றவனே  
உன்னதமிக்க  உண்மை விவசாயி !!!.....
இத்தகையோரின்  உழவுக்கும் , தொழிலுக்கும்  வந்தனை  செய்வோம் !!!.
==============================================================
             இவன் >>      >>> பிறைத்தமிழன்