" முன்கோபி "
பிறரை வீழ்த்தச்செயும் சூழ்ச்சி ,
பிறகொருநாள் உனக்கெதிராய் சொல்லும்
சாட்சி !
உனக்கு ஏற்ப்பட்ட சறுக்கல்
உன் தலையில் எழுதப்பட்ட கிறுக்கல் என -
எண்ணாமல் பெருக்கல் எனும் கணக்குப்போட்டு
வாழ்ந்து காட்டு !
தரித்திரத்திலும் சரித்திரம் படைப்பவனே ,
பவித்திரத்தின் பாத்திரதாரி !
நன்மைக்கு தீமை எதிரி ,
நமக்கு நாமே எதிரி !
சொல் புத்தி , சுய புத்தி ,
இரண்டும் இல்லாத முன்கோபி ,
இருபக்கக் கூரான கத்திக்கு ஒப்பானவன் !
வஞ்சகனின் வாயைப்போல் ,
கொடுமையான ஆயுதம் வேறேதும் இல்லை !
உன்னைவிட திறமைசாலி என பிறரை நினை ,
பிறரைவிட திறமைசாலி ஆவதற்கு நீ முனை !
உன்னைபுரிந்து பிறர் வாழ்வதை விட ,
பிறரைப் புரிந்து நீ வாழ்வாயாக !
நயம் இல்லாதார் வாழ்வில் ஜெயம் கொள்ளார் ,
ஜெயம் கொள்ளாதார் பயம் உள்ளர் !
ஆரூடம் நாடாதோர் வாழ்வில் ,
யாரோடும் பகையில்லை !
கண்ணை மூடிக்கொண்டு உலகைப் பார் ,
தன்னை மீறிய சக்திக்கு இறைவன் என்றே
பொருள்படும் !
உழைப்பாய் நிறைவாக !.
உண்பாய் அளவாக !!. அமையும் ,
உன் வாழ்க்கை சிறப்பாக ! ! !.....
============================================
>இவன் >>>>> பிறைத்தமிழன் <<<<<<