தடைசெய் , தடைசெய் ,
பீட்டா என்னும் பிசாசு கூட்டத்தை
தடைசெய்..
ஏகாதிபத்திய எகத்தாள கொள்கையை,
எட்டி உதைக்கும் எங்கள் கூட்டம்..!
விரட்டுவோம் , விரட்டுவோம்
ஆதிக்க சதியை அடித்து விரட்டுவோம்
வேணடும் , வேண்டும் ஜல்லிக்கட்டு,
நிரந்தரமாய் வேண்டும் ஜல்லிக்கட்டு !
எறுதுகள் என்றும் எங்கள் உறவு ,
ஏறு தழுவுதல் எங்கள் மரபு..!
ஜாதி ,மத, பேதம் இல்லை ,
ஜல்லிக் கட்டில் தீமை இல்லை..!
கூடிக்கலந்து கொண்டாடுவதெல்லாம்,
கலாச்சார மரபு காத்திடத்தானே..!
தொன்மை வாய்ந்தது தமிழர் கூட்டம் ,
தோற்றுப்போக விடவே மாட்டாம்...!
களம்கண்டது காளையர் கூட்டம் ,
கரை புறலுது கடற்கறை முற்றும்..!
மத்திய , மாநில அரசுகள் யாவும்,
நாட்டுமக்களின் சேவகர்களே யாகும்..!
வீறுகொண்டது தமிழ் இளைஞர்கூட்டம்
இனி உரிமைதனை வென்று காட்டும்..!
தமிழ் இனத்தின் வீர வரலாற்றை ,
இனி உலகநாடுகள் உற்றுநோக்கும்..!
அலங்கா நல்லூர் ,அவனியாபுரம் ,
பாலமேடுகள் இனி
சீறிப்பாயும் காளைமாடுகள்.!
வாடிவாசலில் வரிந்து கட்டுவோம் ,
காளை தழுவி களிப்புற்றிடுவோம்..!
===================================
போராட்டக்களத்தில் இன உணர்வுடன்
>>>>>இவன்; பிறைத்தமிழன் <<<<<<
======================================================
ஒன்றாய் உணர்வு கொண்டாய் தமிழா !
நன்றாய் நமதுரிமை வென்றாய் தமிழா !
தடைகள் யாவயும் தகர்த்தாய் தமிழா ! -இனி
பிறக்கும் தலைமுறை பெருமை கொள்ளும் தமிழா .!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக