மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 14 டிசம்பர், 2017

"புத்தாண்டு"


இயற்கைப் பேரிடர் அற்ற 
இரண்டாயிரத்து பதினெட்டு 
இனிதே துவங்கட்டும் 
இகத்தில் உள்ள எல்லா உயிர்களும் 
இன்புற்று வாழட்டும் !
எல்லை கடந்து ஒளிரும் 
எம் இந்திய தேசத்துள் 
மனிதம் சிதைக்கின்ற  
மதவெறி ஒழியட்டும் !
மக்கள் நலம் மறந்தோரின் 
மகுடங்கள் வீழட்டும் !
பணத்தாசை பிடித்த 
பச்சோந்தி அரசியலை 
பாருலகோர் கூடி பாழ்பட சபிக்கட்டும் !
புரட்சி செய்யாது புதுமைகள் நிகழ 
வறட்சி இல்லாத 
வான்மழை பொழியட்டும் !
இனியாவது வக்கிரம் இல்லாத 
வர்க்கமாய் வாழ மனிதர்கள் பழகட்டும்! 

புத்தாண்டே வருக, புதுப் பொலிவு தருக! 
 >>>:இவன்: பிரியமுடன் பிறைத்தமிழன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக