மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 20 நவம்பர், 2017

"விவசாயி"


கானி  நிலத்திலும் 
கற்களை விதைத்து-உயர்
கட்டிடம்  வளர்த்தோம் !

ஒருதுளி நீரையும்  உறிஞ்சி
விற்க  உத்தமர் தமக்கு       
ஒப்புதல் தந்தோம் !

உரம் என்ற பெயரில்
உயிர் கொல்லி தெளித்து
உச்ச மகசூல் கண்டோம் !

அதில் விளைந்து வந்த
விஷத்தின்  பலனை
விளங்க மறுத்தோம் !

நுகரும் காற்றில்
பகரும் தொற்றால்
நுரைப்பை சிதைந்தோம் !

இனி இறைப்பை நிறைக்க
எங்கு சென்றால்  நாம்
இறப்பை தவிர்ப்போம் ?

நெற்றி வியர்வையை
நிலத்தில் வடித்தவன்
நிரந்தரத் தொழிலாளி !

அவன் செத்துமடியக்
காரண கர்த்தா
வங்கிக்கடன் மேலாளி !

குளு குளு அறையில்
கோடிகள்  சுருட்டும்
கொடுங்கோல்  அரசாட்சி !

அது திருந்தாவிட்டால்
தேர்தல் காலத்தில்
திருப்பி அடிப்பான் இந்த
தமிழக விவசாயி ...!
=========================
  இவன்;பிறைததமிழன்



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக