கானி நிலத்திலும்
கற்களை விதைத்து-உயர்
கட்டிடம் வளர்த்தோம் !
ஒருதுளி நீரையும் உறிஞ்சி
விற்க உத்தமர் தமக்கு
ஒப்புதல் தந்தோம் !
உரம் என்ற பெயரில்
உயிர் கொல்லி தெளித்து
உச்ச மகசூல் கண்டோம் !
அதில் விளைந்து வந்த
விஷத்தின் பலனை
விளங்க மறுத்தோம் !
நுகரும் காற்றில்
பகரும் தொற்றால்
நுரைப்பை சிதைந்தோம் !
இனி இறைப்பை நிறைக்க
எங்கு சென்றால் நாம்
இறப்பை தவிர்ப்போம் ?
நெற்றி வியர்வையை
நிலத்தில் வடித்தவன்
நிரந்தரத் தொழிலாளி !
அவன் செத்துமடியக்
காரண கர்த்தா
வங்கிக்கடன் மேலாளி !
குளு குளு அறையில்
கோடிகள் சுருட்டும்
கொடுங்கோல் அரசாட்சி !
அது திருந்தாவிட்டால்
தேர்தல் காலத்தில்
திருப்பி அடிப்பான் இந்த
தமிழக விவசாயி ...!
=========================
இவன்;பிறைததமிழன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக