மலரும் ,மணமும்
மகரந்தத் துகளும் !
படரும் கொடியும் ,
பனிப்புல் நுனியும் !
தேனும், தினையும்
தெளிந்த நீரும் !
சோலையும், வனமும்
சுகந்தத் தென்றலும் !
சாரலும், மழையும்
சங்கேத அருவியும் !
பாடும் பறவையும்,
பளிர்வெண் கொக்கும் !
வெட்டுக் கிளியும்
சிட்டுக் குருவியும்
தாது மணலும், ததும்பிடும்
அணை, குளங்களும்!
மீதமின்றி மேய்ந்துவிட்ட
மனித மிருகமே ....இனி
மூச்சுக் காற்றின்
முகவரி தேடி........?
முணங்கி மடிவாய்
இது திண்ணமே ........!!!!
================================
>>>>இவன் :பிறைத்தமிழன் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக