மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

"மூச்சுக்காற்றின் முகவரி"


மலரும் ,மணமும் 
மகரந்தத் துகளும் !

படரும் கொடியும் ,
பனிப்புல் நுனியும் !

தேனும், தினையும் 
தெளிந்த நீரும் ! 

சோலையும், வனமும்
சுகந்தத் தென்றலும் !

சாரலும், மழையும் 
சங்கேத அருவியும் !

பாடும் பறவையும், 
பளிர்வெண் கொக்கும் !

வெட்டுக் கிளியும்
சிட்டுக் குருவியும்

தாது மணலும், ததும்பிடும் 
அணை, குளங்களும்!

மீதமின்றி  மேய்ந்துவிட்ட 
மனித மிருகமே ....இனி 

மூச்சுக்  காற்றின் 
முகவரி தேடி........? 
முணங்கி மடிவாய்  
இது திண்ணமே ........!!!! 
================================
>>>>இவன் :பிறைத்தமிழன் ....
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக