மரணம் என்னும் மறுசுழற்சிக்கென
மக்கிக்கொண்டிருக்கும்
மனிதக்குப்பைகளை
உயிருள்ளபோதே ஒழுங்குணர்த்தி
உன்னதம் செய்ய ஆண்டுதோறும் வந்து
அரவணைக்கும் அற்புத ரமளானே
கண்ணியமிகு இரவாம்
லைலத்துல் கத்ரில்
புண்ணியமிகு போர்வையாய் பூமிக்கே
வானவர்கள் சோபனம்
வந்திறங்கும் நிகழ்வது
வாய்க்கவல்ல வண்ணமிகு ரமளானே
எங்கள் உள்ளங்கள் ஒன்றிணைந்திருக்க
உயர் ஈகை எங்கும் பொழிந்திருக்க
உலகம் ஒரு குடையின் கீழ் நிலைத்திருக்க
இறை மறைதன்னை
இகம் சிறக்க இறங்கப்பெற்ற
இனிய காலமிது ரமளானே
பகலெல்லாம் பசித்திருந்து பண்புற்று
இரவெல்லாம் விழித்து இறைவனைத்தான்
தொழுது உன்னை பொருந்திக்கொண்ட
எத்திக்கும் வாழுகின்ற
முத்தக்கீன்கள் யாவருக்கும்
பிறைத்தமிழனின் இதயம் கனிந்த
ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்
======================================
இவன்: பிறைத்தமிழன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக