? மட்டுமா இருக்கு
ஆழிப் பேரலயே கொஞ்சம்
அடங்கு ! நீ -
ஆர்ப்பரித்து அடிக்கின்றாய் இந்த
போற் குணம்தான் எதற்கு ?
இத்தனை பெரிய இறைவனின் தண்டனை !
இயற்கையை சிதைத்ததன் விளைவா ?
கற்பனை உதித்து அற்ப்புதம் விதைத்து ,
சில நற்பலன் அடைவது தவறா ?
தென்றல் வீசும் நந்தவனத்தை
தேடிப்பாயும் தெளிந்த அருவியும் நீர்தானே ?
மலைகளைகூட மணல் மேடாக்கும்
அலைகளைப் பெற்ற கடலே நீ அரக்கனோ ?
மனித உடல்களை மலைகளாய் குவித்து ,
அதில் மரணஓலம் எதிரொலி கேட்டு ,
மதிப்புமிக்க உயிர்களை மலிவாய் வாங்கும்
மாயப் பெருங்கடல் மாபரும் வணிகனோ ?
புரட்டிப் போட்டு பூமியை மிதித்ததில் ,
கார்களும் கப்பலும் கட்டிட உச்சியில் !
குப்பை கூலமாய் குவிந்து கிடக்கும் ,
கோரக் காட்சியின் கொடுமைத் தொடறாய் ,
அலக் களிப்பில் அணுவும் உலையும்,
அடக்க முடியா அதன் கதிரின் வீச்சும் ,
ஜப்பான் தேச சவக் கிடங்காய்
சென்டாய் நகரம் சிதைந்து போய் ,
மனுவும் மக்களும் , மால்வது கொடுமை !
மனுவும் மக்களும் , மால்வது கொடுமை !
மரணம் என்பது இயற்கையாகும் !
மால்வது என்பது தண்டனையாகும் !!
வாழ்வது வரை ஆயுள் அதனை
வீணில் நீயும் செலவு செய்து ,
நஷ்ட மேதும் அடைந்து விடாதே
மாண்புக் குரிய மனித இனமே !!!
காலத்தின் மீது சத்திய மிட்டு
இறைவன் கூறும் வசனம் ஒன்று
இதோ
=================================================
மனிதன் ( தன் ஆயுளை வீணில் செலவு செய்து )
நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான் :அத்~103 ~
அல்அஸ்ர்~காலம் ( 13 ):அல் குர் ஆண்
=================================================
இவன் >> >> பிறைத்தமிழன்
இது படைத்தவனின் எச்சரிக்கை
பதிலளிநீக்கு