" வேண்டும் "
==========================================================================
நிம்மதியாய் உறங்கிட வேண்டும்!
நிலம் வெளுக்குமுன் விழிக்கவேண்டும் !
நிறைவாய் உழைத்திட வேண்டும்!
நேரத்திற்கு பசித்திட வேண்டும் !
நேர்மையானதையே புசித்திடவேண்டும் !
நிழல்களை வெறுத்திட வேண்டும் !
நிஜத்தையே ரசிக்க வேண்டும் !
பார்வையை பதித்திட வேண்டும் !
பாதையை பழகிட வேண்டும் !
படைத்த ஒருவனையே வணங்கி ,
வாழ்க்கை பயணத்தை தொடறந்திட வேண்டும் !
========================================================================
>>> இவன் :>>> பிறைத்தமிழன் .