மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 14 டிசம்பர், 2014


               " அழகு "                                                                  
====================================
     வெற்றியும் ,தோழ்வியும் ,
                          வீரனுக்கு அழகு !

    லாபமும் ,நஷ்டமும் ,
                  வியாபாரிக்கு அழகு !

     இல்லற  சுகங்கள் ,
                           இல்லாத போது !

    இன்பமும் ,துன்பமும் ,
                        இரு வேறு அழகு !

    கொஞ்சலும் ,கெஞ்சலும் ,
                       கூடி வரும் போது !

   கோபமும் ,தாபமும் ,
                              கூடவே  அழகு!

    உறவும் , உரிமையும் ,
                  உண்டு எனும் போது !

    மறப்பதும் , மன்னிப்பதும் ,
                     மனிதனுக்கு அழகு !

    இரவும் ,பகலும் ,
                        எஇகத்தின்  அழகு!

    இடியும் ,மின்னலும் ,
                     மழைக்கு      அழகு !

    எதுகையும் ,மோனையும் ,
                      கவிதைக்கு அழகு !

    வடித்தலும் ,வரைதலும் ,
                  வார்த்தைக்கு அழகு !

    வியர்வையும் ,களைப்பும் ,
                      வேலைக்கு அழகு !

    விரைந்து கிடைக்கின்ற கூலி ,
                        விரும்பிய அழகு !

    பரந்து   விரிந்த,
                            பா  ருலகு,அதை !

    பளிச்சிட வைக்கின்ற ,
                         பகலவன்   அழகு !

    இரவில் பொழிகின்ற ,
                                       பனி அழகு !

   அந்த பனித்துளி போர்த்திய,
                          புல்வெளி  அழகு !

   இளங்காலை   இசைக்கின்ற ,
                       பூ பாளமும் அழகு !

   கலையில்       உதித்தெழும்,
                           கதிரவன்  அழகு !

   கடும்பகலில்    கிடைக்கின்ற ,
                     கம்மங்கூல்   அழகு !

   மாலையில் பூக்கின்ற ,
                           மல்லிகை அழகு !

    மனைவி சூடிடும் போது ,
   அதன் மனமோ மயக்கும்
                                                 அழகு !
    இரவில்     உலவும் ,
                             நிலவும்   அழகு !

     அந்த நிலவில்  மலர்ந்திடும் ,
                அல்லிப்  பூக்கள் அழகு !
=================================================
              இவன் >>பிறைத்தமிழன் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக