மொத்தப் பக்கக்காட்சிகள்
செவ்வாய், 11 பிப்ரவரி, 2014
வியாழன், 6 பிப்ரவரி, 2014
" நல்ல மழை "
மக்கள்நலம் பேனமறந்த
மத்தர்களும் குடிக்கிற கஞ்சிய
கொட்டிக் கவிழ்க்கிற
கொடுங்கோலரும் ஆளும்நாட்டில்
முன்பு பஞ்சம் போக
நல்ல மழை வேண்டினேன் ,
பின்பு தஞ்சம் புக
வழியின்றி தவிக்கின்றேன் !
காரணம் குடை கிழிந்து ,
கூரை பிய்ந்து ,
கூரை பிய்ந்து ,
குடிசை மூழ்க , கொட்டித்தீர்த்த ,
கோபக்கார மழையினால் ,
தஞ்சம் புக வழியின்றி தவிக்கிறேன் !!!
------------------------------------------------------------------------------------
பிரியமுடன் பிறைத்தமிழன்
>>>> இவன் >>> பிறைத்தமிழன் ....!!!
புதன், 6 பிப்ரவரி, 2013
ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013
சனி, 2 பிப்ரவரி, 2013
ஞாயிறு, 27 ஜனவரி, 2013
" கையூட்டு "
கையூட்டு
இயற்கை சிதைத்தவர்கள் !இதயம் சிறுத்தவர்கள்,
பூமியைப் பிளந்தவர்கள்,
பூகம்பம் விதைத்தவர்கள் !
நீர் நிலைகளெல்லாம்,
நிரவி விட்டவர்கள் -அதில்
மாடி வீடுகட்ட மணல்
கொள்ளை இட்டவர்கள் !
அதிகார வர்க்கங்களாய்,
அவனியில் நின்றவர்கள் !
சதிகார கூட்டணியில்,
சங்கமம் ஆனவர்கள் !
மரம் மரமாய்
வெட்டிச் சாய்த்தவர்கள்,
மழை வரமாய்
கேட்டு ஓய்ந்தவர்கள் !
அணுவைப் பிளந்து
அறிவைப் பதித்தவர்கள்,
மனுவை குளைத்து
மண்ணில் புதைப்பவர்கள் !
சாதியின் பெயராலே
சமூக அவல த்தை,
சாதனைப் பட்டியலில்
சமத்தாய் சேர்த்தவர்கள் !
கலாச் சாரத்தை
காலில் மிதித்தபடி ,
உலகத் தரத்தை
ஓடிப் பிடித்தவர்கள் !
காலச் சக்கரத்தை
கணினி மயமாக்கி ,
கடவுளே வந்தாலும்கையூட்டு கேட்பார்கள் !
==================================== >>> இவன் பிறைத்தமிழன் . <<<
சனி, 26 ஜனவரி, 2013
" என் பேனா "
ஆயிரம் கோடி அணுக்கள் உலவும்,
பின்னிப் பிணைந்த
நரம்புகள் தோறும்!
மின்னல் மேவிஉராய்ந்தது போலே,
அந்நிய ஸ்பரிசம்
ஆட்கொண்ட வேளை!
மெல்லிய இறகெனமேனியில் வருடி,
அள்ளிய கரங்கள்
ஆரத் தழுவின தாலே !
ஆறாம் அறிவும் அழிந்தது போலே ,
நானாக என்னை மீட்டு எடுக்க !
யாதொரு வழியும் தோனா நிலைதனை, தோற்றுவித்தவளின்
தொடரும் நினைவை !
தேனாய் இனிக்க திரும்பக்கேட்டேன்
என் பேனா முனையும் அவள்
பெயர் சொல்ல வில்லை !
===================================இவன் : பிறைத்தமிழன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)