ஆயிரம் கோடி அணுக்கள் உலவும்,
பின்னிப் பிணைந்த
நரம்புகள் தோறும்!
மின்னல் மேவிஉராய்ந்தது போலே,
அந்நிய ஸ்பரிசம்
ஆட்கொண்ட வேளை!
மெல்லிய இறகெனமேனியில் வருடி,
அள்ளிய கரங்கள்
ஆரத் தழுவின தாலே !
ஆறாம் அறிவும் அழிந்தது போலே ,
நானாக என்னை மீட்டு எடுக்க !
யாதொரு வழியும் தோனா நிலைதனை, தோற்றுவித்தவளின்
தொடரும் நினைவை !
தேனாய் இனிக்க திரும்பக்கேட்டேன்
என் பேனா முனையும் அவள்
பெயர் சொல்ல வில்லை !
===================================இவன் : பிறைத்தமிழன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக