" நல்ல மழை "
மக்கள்நலம் பேனமறந்த
மத்தர்களும் குடிக்கிற கஞ்சிய
கொட்டிக் கவிழ்க்கிற
கொடுங்கோலரும் ஆளும்நாட்டில்
முன்பு பஞ்சம் போக
நல்ல மழை வேண்டினேன் ,
பின்பு தஞ்சம் புக
வழியின்றி தவிக்கின்றேன் !
காரணம் குடை கிழிந்து ,
கூரை பிய்ந்து ,
கூரை பிய்ந்து ,
குடிசை மூழ்க , கொட்டித்தீர்த்த ,
கோபக்கார மழையினால் ,
தஞ்சம் புக வழியின்றி தவிக்கிறேன் !!!
------------------------------------------------------------------------------------
பிரியமுடன் பிறைத்தமிழன்
>>>> இவன் >>> பிறைத்தமிழன் ....!!!