மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 4 ஏப்ரல், 2020

"இழி நிலை"


இயற்கைச்சீற்றத்தின்
எத்தகைய கோபமும்
ஏழைகளின் மீதுதான்
விதியாக்கப்பட்டுள்ளது
நோயும்,பேயும்
நோகாமல் காசுபார்க்கும்
மருத்துவமும், மருத்துவனும்
இதில் ஏகபோக அங்கம்
இத்தனை இழிநிலைகளை
கடந்து  இயல்பாக
இந்ததேசத்தில் வாழவேண்டி
விழித்தே இருக்கிறேன்
விடியல்தான் வரவேயில்லை.
=========================
இவன்:பிறைத்தமிழன்.


வெள்ளி, 3 ஏப்ரல், 2020

"வறுமை"

வறுமையின் 
கொடுமைபற்றி
வாழ்ந்து உணர்ந்தவன்
வயிறுபுடைக்க 
உண்ணமாட்டான்
தான் உண்ணும் 
இன்னொரு பிடி 
உணவையும் 
பிறருக்கென ஈந்து
பேரின்பம் கொள்வான்....
====================
இவன்:பிறைத்தமிழன்.

புதன், 1 ஏப்ரல், 2020

"நம்பிக்கை"

"நம்பிக்கை"

நேசிப்பவர்கள் 
எல்லோரும்  நம்மோடு 
நிலையாக தங்கிவிட்டால்
நினைவின் மொழியும்,
பிரிவின் வலியும் தெரியாமலே போய்விடும்-எனவே
நம்பிக்கை நிறைந்த ஒருவர்
யாரிடமும் மண்டியிடுவதில்லை
எவரிடத்தும் 
கையேந்துவதும் இல்லை
தன்னைப் படைத்த
புகழுக்கு உரிய வல்லமை மிக்க
அல்லாஹ்வைத் தவிர....
===========================
இவன்:பிறைத்தமிழன்.

செவ்வாய், 31 மார்ச், 2020

"துரோகம்"


எனக்கு இழைக்கப்பட்ட 
துரோகங்களை எப்படியாவது 
மறக்க முயல்கிறேன்
இருந்தபோதும் யாரெல்லாம் 
என்னை தங்களின் நினைவில் சுமக்கின்றனரோ அவர்களை 
என் நெஞ்சத்தில்
நிஜமாக சுமக்கின்றேன்
புகழுக்குறியவனின் 
பொருத்தம் நாடியவனாக...
==============================
இவன்:பிறைத்தமிழன்...

ஞாயிறு, 29 மார்ச், 2020

"கொரோனா "


இயற்கை எனும் இன்பத்தை
மீதமின்றி மேய்ந்துவிட்ட
மனித மிருகத்தின்
மா பெறும் ஆற்றல்,
அவனின் கண்டுபிடிப்பு,

வியத்தகு விஞ்ஞானம்,
வின்முட்டிய தொழில் நுட்பம்,
விரிவான பாதுகாப்பு
எல்லாம் இப்போது எங்கே?

கொலைவெறியுடன்                கோரத்தாண்டவமாடும்
கொள்ளைநோய் கொரோனா
சொல்லும் சேதிதான் என்ன?

நிரந்தரமில்லா உயிர்களும்,
உயிரினங்களும் போலவே.....
அழிந்துவிட்ட இனத்தின் பட்டியலில்
இனி மனிதனுமா ? அய்யகோ.......

இறைவா எதிர் வரும் ரமளானுடைய
புனிதத்தின் பொருட்டால்
பூமி எங்கிலும் உள்ள மனித வர்கத்தை
காத்தருள் புரிவாய் ரஹ்மானே....
================================
இவன்;பிறைத்தமிழன்...




வெள்ளி, 31 மே, 2019

"ஜககாத்"


நோன்பு காலங்களில் 
" ஜக்காத் ,சதக்கா " கொடுக்கும் 
கணவான்களே முதலாவதாக
கஷ்டத்தில் இருக்கும் 
உங்கள் உறவுகளை
கவனத்தில் கொள்க!  
அடுத்தது  
எவர் ஒருவர் வருமை 
வாட்டி வதைக்கின்ற போதும் 
வழியச்சென்று 
யாசகம் கேட்காமல் 
தன்னை படைத்தவனிடம் 
மட்டுமே கையேந்தி
                    கேட்கின்றார்களோ
அத்தகையவர்களை 
இனங்கண்டு 
உதவி செய்யுங்கள் 
அப்போது நிச்சயமாக  
அல்லாஹ்வின் கருணையும்,
அளப்பரிய நன்மைகளும் 
இரட்டிப்பாக   வந்து சேரும்
====================================
பிறைத்தமிழன்..

செவ்வாய், 28 மே, 2019

வானங்களிலும் ,
பூமியிலும் உள்ளவை 
அனைத்தும் யாரை 
துதி செய்கின்றனவோ
அவன் (அனைவரையும்)
மிகைத்தவனும்,
ஞானமுடையவனும் 
ஆவான்
அவனே என் இறைவன்
அவனுக்கே புகழ் 
அனைத்தும் !
=======================
பிறைத்தமிழன்..