மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

"ஜல்லிக்கட்டு"


தடைசெய் , தடைசெய் ,
பீட்டா என்னும் பிசாசு கூட்டத்தை
தடைசெய்..

ஏகாதிபத்திய எகத்தாள கொள்கையை,
எட்டி உதைக்கும் எங்கள் கூட்டம்..!

விரட்டுவோம் , விரட்டுவோம்
ஆதிக்க சதியை அடித்து விரட்டுவோம்

வேணடும் , வேண்டும் ஜல்லிக்கட்டு,   
நிரந்தரமாய் வேண்டும் ஜல்லிக்கட்டு !

எறுதுகள் என்றும்  எங்கள் உறவு ,
ஏறு தழுவுதல் எங்கள் மரபு..!

ஜாதி ,மத,  பேதம் இல்லை ,
ஜல்லிக் கட்டில் தீமை இல்லை..!

கூடிக்கலந்து கொண்டாடுவதெல்லாம்,
கலாச்சார மரபு காத்திடத்தானே..!

தொன்மை வாய்ந்தது தமிழர் கூட்டம் ,
தோற்றுப்போக விடவே மாட்டாம்...!

களம்கண்டது காளையர் கூட்டம் ,
கரை புறலுது கடற்கறை முற்றும்..!

மத்திய , மாநில அரசுகள்  யாவும்,
நாட்டுமக்களின் சேவகர்களே யாகும்..!

வீறுகொண்டது தமிழ்  இளைஞர்கூட்டம்
இனி உரிமைதனை வென்று காட்டும்..!

தமிழ் இனத்தின் வீர வரலாற்றை ,
இனி உலகநாடுகள் உற்றுநோக்கும்..!

அலங்கா நல்லூர் ,அவனியாபுரம் ,
பாலமேடுகள்   இனி
சீறிப்பாயும்  காளைமாடுகள்.!

வாடிவாசலில் வரிந்து கட்டுவோம் ,
காளை தழுவி களிப்புற்றிடுவோம்..!
===================================
போராட்டக்களத்தில்  இன உணர்வுடன்
  >>>>>இவன்;    பிறைத்தமிழன் <<<<<<
======================================================
ஒன்றாய்  உணர்வு கொண்டாய் தமிழா  !
நன்றாய் நமதுரிமை வென்றாய் தமிழா  !
தடைகள் யாவயும்   தகர்த்தாய்  தமிழா   ! -இனி
பிறக்கும் தலைமுறை பெருமை கொள்ளும் தமிழா .!!!

                        

வெள்ளி, 13 ஜனவரி, 2017

"வறட்சிப் பொங்கல்"

          "காளைதழுவி முத்தமிட"
ஏழை விவசாயி
எத்தனை நாளைக்கு
எலிக்கறி திண்பான் ?

கூன்விழுந்து குடல் சிறுத்து வறுமை
குப்புறத் தள்ளிய போதும்
நான் உழுது   தான் விதைத்து
நானிலம் வாழ
அறுவடை செய்தான்

காலமெல்லாம் கிடைப்பது
பட்டுத்துணியா? இல்லை
பகட்டுடைய வாழ்வா ?
கழனி நீரும் கால்வயிற்று கூழும்,
ஓலைக் குடிலும்
ஒட்டுக்கோமணமும் தானே ,

இது   போதுமே !  என
பெருமூச்சு விட்ட
விவசாயி   இப்போது
கை சேதமே ! என
கண்ணீர் வடிக்கிறான்  ஏன் ?

டிஜிட்டல்  கணவான்களும்,
ஒற்றைவிரலில்
உலகப் பொருளாதாரம்  பேசுவோரும்
கண்களில்  என்ன
கருப்புத்துணியா கட்டியுள்ளனர் ?

இந்திய தேசத்தின்
இதயத்துடிப்புக்கள் எங்கள் [விவசாயி ]
மாநிலம்தோறும்
மாண்டுபோனால்  மண்  நிலமெங்கும்
மலடாய்ப் போகுமே

சோலையாய் விளைவித்த நம்
சொர்க்க பூமி   வறண்டு
பாலையாய் போனபின்னும் என்
காளையைத் தழுவி கட்டியனைத்து
முத்தமிடத்தான்ஆசையாய்......
   ~~~~~{ஜல்லிக்கட்டு}~~~~~~

பீட்டா என்னும் பித்துப் பிடித்த
பிசாசுக்கூட்டமே  நீங்கள்
உண்ணும் உணவை
ஊட்டி வளர்க்க உழவு செய்தவை யாதென தெரியாதா ?

காட்டு மிருகமும்
காளைக்கூட்டமும் ஒன்றா ?

கனிம வளங்களை
களவாடிய கூட்டமே
கணினி கலாச்சாரம் கடவுளாகிபோனால்
இயற்க்கைதனை
எட்டி உதைப்பீரோ ?

வானமும் வஞ்சிக்க,
வழியேது கஞ்சிக்கே !

சட்டத்தின் ஓட்டைக்குள்ளே
சட்டைத்துணிகளை
சலவையிட்டு வெளுப்பவர்கள்
பொய் வாக்குறுதி விதைத்து
நிஜ வாக்கு அறுவடைக்கு
பணநாயகம் செய்கின்ற
அரசியல் அயோக்கியர்கள்

அரிச்சுவடி தெரியாமல்
அரியணை  ஏரியபின்
அதிகாரச் சண்டையில்
ஆண்டவனை மறந்தவர்கள்,
விவசாய மக்களை வேதனையில் தள்ளி
உழவுத்தொழிலை ஒழித்துக்கட்ட
ஓரணியில் திரண்டவர்கள் யாரென

இனங்கண்டு இடித்துறைப்போம்
இரும்புத் தடம் பதித்து
எழுந்து வருக  என்
இன்பத் தமிழினத்தின்
இனமானச் சிங்கங்களே

உதடுகள் சிரிப்பது பேருக்கு,
நம் உள்ளங்கள் அழுவதோ
தமிழ்நாட்டு உழவர்களின் "சாவுக்கு"
இனிவரும் சந்ததிக்கு
எடுத்துச்சொல்லும் முகமாக
வலிய கொண்டாடுவோம் வலி நிறைந்த
வறட்சிப் பொங்கலை !!!!!!!!!!
==================================
                 இவன்; பிறைத்தமிழன்.
    

சனி, 31 டிசம்பர், 2016

புத்தாண்டுப் புலம்பல்


       ஏகாதிபத்தியத்தின்  எகத்தாள கொள்கைகளை  ஏத்திப்பிடிக்கின்ற
            எத்தர்களை இனங்கண்டு
         இடித்துரைக்க முனைவோமே

                   ஏழைகளே இல்லாத
    டிஜிட்டல் இந்தியா என்பதெல்லாம்
      ஏமாற்று மோ{ச}டி வித்தையென
                 எடுத்து உரைப்போமே

              ஏழை ,நடுத்தர ,சாமான்ய
         மக்களுக்கு எதிராக விடப்பட்ட
  பொருளாதார போர்ப்பிரகடனமென
           பொங்கித்தான் எழுவோமே

               வங்கிகளின் வாசலிலே
           வடிக்கின்றோர் கண்ணீரை
       துடைக்கின்ற முகமாக சிறுசிறு
                 சேவைகள் புரிவோமே

                  மதத்தின் பெயராலே
            மற்றோரை வதைக்காமல்
                   மனித வக்கிரத்தை
        மண்தோண்டிப் புதைப்போமே

                பொதுஜன பொறுப்பை
                  புறந்தள்ளிப் பாராமல்
               வெகுஜன விரோதத்தை
                 வேரோடு சாய்ப்போமே

               பிறக்கின்ற புத்தாண்டில்
           பிறைத்தமிழன் வாழ்த்தோடு
                    பிரபஞ்சம் எங்கிலும்
              பிரியத்தைப் பகிர்வோமே ...
   ====================================
                  இவன் :பிறைத்தமிழன் .....

ஞாயிறு, 20 நவம்பர், 2016

"பணம் மட்டுமே எல்லை'



மரணம் எனும்
மறு சுழற்சிக்கென
மக்கிக்கொண்டிருக்கும்
மனிதக் குப்பைக்குள்-

உயிருள்ள போது மட்டும்
எத்தனை ஏற்றத்தாழ்வு !

வறுமையோடு
போராடுபவனுக்கு '
வயிறு மட்டுமே எல்லை  !
வளர்ந்துவர
போராடுபவனுக்கு '
பணம் மட்டுமே எல்லை !

வானம் தொட்ட பணக்காரனுக்கு  '
வளைத்துப்போடுவதெல்லாம்
எல்லை  !     இவர்களின்-
உதடுகள் சிரிப்பது பேருக்கு !
உள்ளங்கள் அழுவது யாருக்கு ?
====================================
         > இவன் ;பிறைத்தமிழன் ..

புதன், 16 நவம்பர், 2016

"பூனை நடை "

                      "பூனை நடை " 
        
     காலச்சக்கரத்தை                                    
     கணினி  மயமாக்கி ,                              
     கலாச்சாரத்தை                                        
     காலில் மிதித்தபடி,                                
     உலகத்தரத்தை  ஒடிப்பிடிக்க   ?      
      மகத்துவமிக்க                                          
     மனித அடையாளத்தை                        
     தொலைத்துவிட்டு                                  
     மாயைமிகுந்த  உலகைத்தேடி         
     அலைந்துகொண்டிருப்பவர்கள்     
                                     ...........இவர்கள்..!!       
                     இவன் ;பிறைத்தமிழன்.       

திங்கள், 7 நவம்பர், 2016

"பசித்தபின் புசி"

        



          ஊக்கம்           கொழுத்தவனை
                                                     ஓரம் கட்டி
         உன்னில்       இளைத்தவனிடம்
                                        கருணை காட்டு
         புசிக்கக்     கொடுத்து       நீ ........
                               பசித்தபின்  சாப்பிடு
        ஏழையை     குறிவைத்து     உன்
                          சேவையை   தொடங்கு
         ஏகத்துவக்    கொள்கை  தனை
                             ஏந்திப்பிடி  அப்போது
          வாழ்வின் வசந்தங்கள் யாவும்
          வசப்படும்     தருணங்களாகும்
==========================+==========
                        இவன்; பிறைத்தமிழன்

சனி, 15 அக்டோபர், 2016

"ஐயா அப்துல் கலாம்"


தந்தை படகோட்டி - அவர்
தமிழால் உனை தாலாட்டி
அறிதலே உன் ஆராய்ச்சி !
அணுவை மெருகூட்டி -அதற்க்கு
அக்கிணிச் சிறகுபூட்டி !
அகிலத்தை அதிர வைக்க
வின்னில்தேரோட்டிய
விந்தை மனிதரே- 
உச்ச பதவிகள் உனைவந்து சீராட்டி !
இருந்தும் துச்சமென நினைத்து
தொடர்தே  பனியாற்றி !
அரசியல் சாயத்தை 
அப்புறப் படுத்திய  எதிரி இல்லா
இந்திய தேசத்தின் இனிய மனிதரே
இருந்தது  கனவா ?  நீ
இறந்தது  கனவா ? வெற்றியை நோக்கி
விழி திறந்து கனவு  கானும்
வித்தையை விதைத்தவரே- இன்று
இளைஞர்களின் இதயத்தில் நீ - என்றும்
இந்தியாவின் உதயத்தில்  நீ !!!......
====================================
இவன் ; பிறைத்தமிழன்