மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 2 பிப்ரவரி, 2013

"பாசமுள்ள,கடவுள்"


                          கடவுள்                              
               ஓரிறைக்  கொள்கை - என்        
               உயிர்த்  துடிப்பாக                           
               இல்லாது   இருந்தால் ,                
               பணம்      மட்டுமே    - என்             
               பாசமுள்ள,   கடவுளாக                 
               இருந்திருக்கும் !                             
 =====================================

                 இவன்>பிறைத்தமிழன் .         

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

" கையூட்டு "

    
                                          கையூட்டு                                 
இதயம்  சிறுத்தவர்கள்,
இயற்கை சிதைத்தவர்கள் ! 
பூமியைப் பிளந்தவர்கள்,
பூகம்பம் விதைத்தவர்கள் !
       நீர்   நிலைகளெல்லாம், 
       நிரவி  விட்டவர்கள் -அதில் 
       மாடி வீடுகட்ட மணல்                 
       கொள்ளை இட்டவர்கள் !
அதிகார  வர்க்கங்களாய்,
வனியில் நின்றவர்கள் !
சதிகார  கூட்டணியில்,
சங்கமம்  ஆனவர்கள் !
        மரம்  மரமாய்
        வெட்டிச்  சாய்த்தவர்கள்,
        மழை   வரமாய்
        கேட்டு  ஓய்ந்தவர்கள் !
அணுவைப்   பிளந்து    
றிவைப்  பதித்தவர்கள்,
மனுவை  குளைத்து
மண்ணில்  புதைப்பவர்கள் !
           சாதியின்   பெயராலே     
           சமூக   அவல த்தை,       
           சாதனைப் பட்டியலில்  
           சமத்தாய்  சேர்த்தவர்கள் !
லாச் சாரத்தை 
காலில்  மிதித்தபடி ,
லகத் தரத்தை  
ஓடிப்  பிடித்தவர்கள்  !
            காலச்  சக்கரத்தை
            கணினி மயமாக்கி ,
          கடவுளே   வந்தாலும்  
          கையூட்டு   கேட்பார்கள் !
====================================                                >>>  இவன்     பிறைத்தமிழன் .  <<<                                            

சனி, 26 ஜனவரி, 2013

" என் பேனா "

ஆயிரம்  கோடி  அணுக்கள் உலவும்,
பின்னிப்  பிணைந்த   
நரம்புகள் தோறும்!
மின்னல்  மேவிஉராய்ந்தது போலே,
அந்நிய  ஸ்பரிசம்  
ஆட்கொண்ட  வேளை! 
மெல்லிய இறகெனமேனியில் வருடி,
அள்ளிய  கரங்கள்  
ஆரத் தழுவின  தாலே !
ஆறாம் அறிவும் அழிந்தது போலே ,
நானாக என்னை  மீட்டு எடுக்க !
யாதொரு வழியும்   தோனா நிலைதனை, தோற்றுவித்தவளின்
தொடரும்    நினைவை !
தேனாய் இனிக்க  திரும்பக்கேட்டேன் 
என் பேனா   முனையும்  அவள்
பெயர்    சொல்ல வில்லை !
===================================
       இவன் :   பிறைத்தமிழன்

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

" தை" திருநாள்

    
       தை   முதல்   நாளாய்
                                     தமிழரின்     திருநாளாய்
       பொங்கல்  வந்ததடி
                                  புது வருடம்  பிறந்ததடி

      பொன்மாரி    பொழிய லேயே 
                   புது  நெல்லும்  விளைய லேயே
       தண்ணீரை   கான  உழவன்
                            செந்நீரை  வடித்த  பின்னும்   

       கர்நாடகம்   கை  விரித்து
                              காவிரியை   தான்  தடுத்து
       கல்லணை   காய்ந்தபின்னும்
                       கடும் வறட்சி கண்டபின்னும்

        தை    முதல்   நாளாய் 
                                 தமிழரின்      திருநாளாய்
         பொங்கல்   வந்ததடி
                                  புது வருடம்   பிறந்ததடி

        தீ   மூட்டா      அடுப்பினிலே
                         தெருப்பூனை   அடை  காக்க
        புளிச்சாணி     பானை தனை
                        போட்டுடைத்த  பின்னாலும்  

       ஏறு   பூட்டி எள்ளு விதைக்கும்
                                        ஏழை  உழவனையும்
           மாறுதட்டி     மல்லுக்கட்டும்
                           கொடிய     வறுமையினால்
      
            காத்து வைத்த  கால்  குருனி
                                              விதை    நெல்லும்
       சோத்துப்பானை     சொன்னபடி 
                                               வெந்த   பின்னும்

       பொங்கல்  வந்ததடி
                                  புதுவருடம்   பிறந்ததடி
       தை    முதல்   நாளாய்
                                  தமிழரின்   திருநாளாய் 

       பொங்கல்   வந்ததடி
                                     புடவை  வேட்டியுடன் 
                       புதுப்பானை    வேணுமடி

        தித்திக்கும்  செங்கரும்பாய்
        தெவிட்டாத   பொங்கலுமாய்
        திக்கெல்லாம்  வாழுகின்ற  என்
        தமிழினத்தார்  கொண்டாட
        பிறைத்தமிழன் வாழ்த்துக்கள்  இன்று
        பிரியமுடன்  இங்கு பதியுதடி 
===========================================================
       >>>  இவன்    பிறைத்தமிழன் 

திங்கள், 31 டிசம்பர், 2012


 தினசரி   கிழித்ததினால்  
தினசரியும்    தீர்ந்தது -அதனால்

இன்னொரு   வருடத்தின்
இனிய  முகவரி யாய்
ஜனவரியும்   பிறந்தது

ரணங்கள்   மறைந்தாலும்
வடுக்கள்  வலிக்கிறது
இனியாவது

புரட்சி    செய்யாது
புதுமைகள்   நிகழ

வறட்சி    இல்லாத
வான் மழை   பொழியட்டும்

   வக்கிரங்கள்   இல்லாத
   வர்க்கமாய்   வாழ    
   மனிதர்கள்  பழகட்டும்
 
என -
 2013- ஐ  வரவேற்கும்

 பிறைத்தமிழனின்   பிரியமான குரல்
பெருமையுடன்   பதியட்டும்
 பேதமைகள்    ஒழியட்டும் ...!!!
 
=============================================== 
 இவன் >>> பிறைத்தமிழன் <<<

சனி, 29 டிசம்பர், 2012

தங்கமழை பொழியாதோ ?



    விதைகள்    விசமாகி ,
    வெள்ள    எரிக்கஞ்செடி பயிறாகி !


    விளைச்சலும்  பொய்யாகி ,
    வீழ்ந்தானே   விவசாயி !

   ஆடியிலே    பட்டங்கண்டு .
    தேடியே     விதைவிதைத்து !

   ஆழ     உழுதானே ,
   அன்னாந்து   பார்த்தானே !

    அடைமழை  பெய்யவில்லை ,
    ஆறு குளம்  நிறையவில்லை !


    புயல் மழையும்  பொய்யாகி ,
    பூந்தோட்டம்   சருகாகி !


    புலம்பல்    பொருளாகி !
    போனானே (விவசாயி) பிணமாகி !


     காவிரியை  பூட்டிவைக்கும் ,
     கர்நாடக   சண்டியரே !

     நீதிக்கு   தலைவணங்கா ,
     நீ மட்டும்   நிரந்தரமா ?
     மார்கழி  விடை கொடுக்க ,
     மறுபடியும்  தை பிறக்க !

     மகிழ்ச்சியில்  மனங் குளிர ,
     மண் உழுதோர்  யா ரிருக்கார் !

     பூமிக்கு     நீர் வார்க்கும் ,
     புகழெல்லாம்  இறைவனுக்கே !- என

     பூரித்து   பொங்கல் வைக்க ,
     புதுநெல்லும் தான்  பறிக்க !

     தங்கமழை  பொழியாதோ ?
     தமிழகமும்   குளிராதோ   ?
     தாகமும்  தீராதோ  ?
     தமிழர் முகம்  மலராதோ  ?
================================
       இவன்       >>>   பிறைத்தமிழன்   <<<                                  

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

விசத்தை ருசி பார்த்து ,

     விசத்தை   ருசி  பார்த்து ,   
     விசமத்தை   வேரறுக்க  !   


   அளவில்லா   ஆனந்தம்  பெருக ,              
   அன்பினால் இரு கண்களும்   உருக !      

   என் சிந்தை யது  சிறக்க ,                               
   செந் தமிலே   நீ     வருக !                               

    உன்னை    ஊரு     செய் ,                                
    உன் மத்தர்    தம்  ஒழிக !                                

    புசத்தை    நே ருயர்த்தி ,                                
     ஒரு  புயலைத்தான்  கிளப்பி !                    

   விசத்தை   ருசி  பார்த்து ,                                
    விசமத்தை   வேரறுத்து !                               

    இனி  விடியல்  நமக்கென்று ,                       
    வெற்றியை     நிலை நாட்டு  !                      

   என்   தமிழே   உன் போலே ,                           
    அமுதும்        கிடையாது !                                

    மொழிப்போர்        அறியாது ,                          
     உனை   மோதி   அழிப்போர்                           

     கரம்  தரியாது     என் ,                                        
     அலுவல்   இனி   ஓயாது !                                 

    எம் மக்கள்    தோள்  மீது  ,                                
     எகத்தாளமாய்   தான் அமர்ந்து  !                  

 

     அவர்தம்   இன்பத்தில்                                        
    இருள்         தெளிக்க ,                                            

    இடுகின்ற  கட்டளையில் ,                                
 
  இறுமாப்பு     குறையாத !                                   

     எங்கள்   பகைவர்          யாரென்று ,               
    இனங்  கண்டே         வேரறுக்க !                       

    தமிழா   பொங்கிப்        புரையோடி ,              
    நமக்குள்ளே    நாறுகின்ற ,                               


    சாதிகள்    ஒழியட்டும் !                                       
    சமத்துவம்     பிறக்கட்டும் ! !                            

    சுட்டெரிக்கும்   சூரியனாய் ,                              
    சுய மரியாதை     ஒளிரட்டும் ...!                      

   ========================================   
           >>> இவன்   :   பிறைத்தமிழன்  <<<           
    =======================================