கையூட்டு
இயற்கை சிதைத்தவர்கள் !இதயம் சிறுத்தவர்கள்,
பூமியைப் பிளந்தவர்கள்,
பூகம்பம் விதைத்தவர்கள் !
நீர் நிலைகளெல்லாம்,
நிரவி விட்டவர்கள் -அதில்
மாடி வீடுகட்ட மணல்
கொள்ளை இட்டவர்கள் !
அதிகார வர்க்கங்களாய்,
அவனியில் நின்றவர்கள் !
சதிகார கூட்டணியில்,
சங்கமம் ஆனவர்கள் !
மரம் மரமாய்
வெட்டிச் சாய்த்தவர்கள்,
மழை வரமாய்
கேட்டு ஓய்ந்தவர்கள் !
அணுவைப் பிளந்து
அறிவைப் பதித்தவர்கள்,
மனுவை குளைத்து
மண்ணில் புதைப்பவர்கள் !
சாதியின் பெயராலே
சமூக அவல த்தை,
சாதனைப் பட்டியலில்
சமத்தாய் சேர்த்தவர்கள் !
கலாச் சாரத்தை
காலில் மிதித்தபடி ,
உலகத் தரத்தை
ஓடிப் பிடித்தவர்கள் !
காலச் சக்கரத்தை
கணினி மயமாக்கி ,
கடவுளே வந்தாலும்கையூட்டு கேட்பார்கள் !
==================================== >>> இவன் பிறைத்தமிழன் . <<<