இமை வடிக்கும் இரத்தக் கண்ணீர்
செல்வத்தில் சிறந்தவர்கள்
உள்ளத்தைச் சுருக்கி ஒளித்தே வைப்பார்கள்
பள்ளத்தில் விழுந்துவிட்டால்
பக்கத்து உறவுகளை பார்த்தே சிரிப்பார்கள்
வாழ்ந்து கெட்டவர்கள் வாழ்வில் நொந்தவர்கள்
வளமாய் இருக்கயிலே வந்து குவிந்தவர்கள்
கூட்டமாய் கூடி கும்மாளமிட்டவர்கள்
ஓட்டமாய் ஓடி ஒழிந்தே கொண்டார்கள்
இவர்கள் அற்றகுளத்து அருநீர்ப் பறவைகள்
செல்வத்தில் சிறந்தவர்கள் சிரிப்பைக்காட்டி
வெறுப்பை உமில்வதர்க்கே
உள்ளத்தை சுருக்கி ஒளித்தே வைப்பார்கள்
எதிர்க்கும் திராணியை இழந்து நிற்கின்ற
ஏழை உறவுகளை எட்டி உதைத்து ஏளனமே செய்வார்கள்
சொத்தும் ,சுகமும் தான் சொந்தத்தின் அடையாளமோ ?
பணமும் பகட்டும் தான் பாசத்தின் எல்லைகளோ ?
கோடிகளில் புரண்டால் தான் கூடவே பிறந்தவளாம்
தாலியே மிஞ்சாத தரித்திரம் உள்ள மகள் உனக்கு
போலியாய் வாழுகின்ற உடன் பிறந்தவர்கள் வேனுமோடி ?
உள்ளத்தைச் சுருக்கி ஒளித்தே வைப்பார்கள்
பள்ளத்தில் விழுந்துவிட்டால்
பக்கத்து உறவுகளை பார்த்தே சிரிப்பார்கள்
வாழ்ந்து கெட்டவர்கள் வாழ்வில் நொந்தவர்கள்
வளமாய் இருக்கயிலே வந்து குவிந்தவர்கள்
கூட்டமாய் கூடி கும்மாளமிட்டவர்கள்
ஓட்டமாய் ஓடி ஒழிந்தே கொண்டார்கள்
இவர்கள் அற்றகுளத்து அருநீர்ப் பறவைகள்
செல்வத்தில் சிறந்தவர்கள் சிரிப்பைக்காட்டி
வெறுப்பை உமில்வதர்க்கே
உள்ளத்தை சுருக்கி ஒளித்தே வைப்பார்கள்
எதிர்க்கும் திராணியை இழந்து நிற்கின்ற
ஏழை உறவுகளை எட்டி உதைத்து ஏளனமே செய்வார்கள்
சொத்தும் ,சுகமும் தான் சொந்தத்தின் அடையாளமோ ?
பணமும் பகட்டும் தான் பாசத்தின் எல்லைகளோ ?
கோடிகளில் புரண்டால் தான் கூடவே பிறந்தவளாம்
தாலியே மிஞ்சாத தரித்திரம் உள்ள மகள் உனக்கு
போலியாய் வாழுகின்ற உடன் பிறந்தவர்கள் வேனுமோடி ?
வலுவிலாராயினும் வையகம் போற்றி !
இழிவுடையோ ராயினும் இனத்தார் போற்றி ! !
வாழ்வாங்கு வாழ்வாரே வசதியை காட்டி ! ! !
தவிர
ஈனமே இருந்திடினும் இன்பமே கண்டிடுவார் !
இப்படிப் பட்டவரே இகம் போற்றும் உறவினராம் ! !
என்று
இமைகள் வடிக்குதே இரத்தத்தை கண்ணீராய் .......
>> இவன் >> "பிறைத்தமிழன் "
இழிவுடையோ ராயினும் இனத்தார் போற்றி ! !
வாழ்வாங்கு வாழ்வாரே வசதியை காட்டி ! ! !
தவிர
ஈனமே இருந்திடினும் இன்பமே கண்டிடுவார் !
இப்படிப் பட்டவரே இகம் போற்றும் உறவினராம் ! !
இமைகள் வடிக்குதே இரத்தத்தை கண்ணீராய் .......
>> இவன் >> "பிறைத்தமிழன் "
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக