தீங்கை தீண்டாமல் களைவது
============================================
============================================
பண்பு > அது ,
பிறரிடத்துப் பேணும் மனித ஒழுக்கம் ...!
பார்வை அது ,
பிரபஞ்சத்தை உருவகப்படுத்துவது ...!
பிறப்பு > அது ,
இறப்பதற்கான இன்றைய தயாரிப்பு ..!
பீதி > அது ,
அச்சத்தின் அடுத்தசகோதரன்...!
புன்னகை > அது
சத்தம் குறைந்த சந்தோசம்.....!
பூக்கள் > அது ,
தாதுக்களையும் , தாவரங்களையும் வேறுபடுத்துவது....!
பெண் > அது ,
ஆணில் தோன்றிய ஆணுக்கான அற்ப்புதம் ...!
பேதமை > அது ,
தாழ்வு தனை தனித்துவத்துடன் வேறுபடுத்துவது.... !
பைந்தமிழ் > அது ,
மொத்தமாய் செறிந்து , சிறந்த முத்தமிழ் ...!
பொறுமை > அது ,
தீங்கை தீண்டாமல் களைவது ...!
போர் > அது ,
செயற்கைப் பேரழிவின் செல்லப் பெயர் ...!
பெளத்தம் > அது ,
கடவுளுக்கான மனித முயற்சி ...!
=============================================================
>> இவன் >> பிறைத்தமிழன் ..........!
>> இவன் >> பிறைத்தமிழன் ..........!
-------------------------------------------------------------------------------------------------------------------