மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 5 மே, 2012

பொறுமை >

  
தீங்கை  தீண்டாமல்  களைவது
============================================
  பண்பு >         அது ,  
பிறரிடத்துப் பேணும்  மனித  ஒழுக்கம் ...! 
பார்வை       அது ,    
பிரபஞ்சத்தை உருவகப்படுத்துவது ...!
 பிறப்பு >     அது ,     
இறப்பதற்கான  இன்றைய தயாரிப்பு ..!
பீதி >             அது ,     
அச்சத்தின் அடுத்தசகோதரன்...!
  புன்னகை >   அது 
 சத்தம் குறைந்த சந்தோசம்.....!
   பூக்கள் >       அது , 
தாதுக்களையும் , தாவரங்களையும் வேறுபடுத்துவது....!
    பெண் >          அது ,
ஆணில்    தோன்றிய  ஆணுக்கான  அற்ப்புதம் ...!
பேதமை >     அது ,  
 தாழ்வு தனை தனித்துவத்துடன் வேறுபடுத்துவது.... ! 
பைந்தமிழ்  >  அது ,
  மொத்தமாய்  செறிந்து , சிறந்த  முத்தமிழ் ...! 
பொறுமை >   அது , 
 தீங்கை தீண்டாமல்  களைவது ...!
 போர் >          அது  ,     
செயற்கைப் பேரழிவின்   செல்லப் பெயர் ...!
 பெளத்தம் >     அது ,
கடவுளுக்கான மனித முயற்சி ...! 
=============================================================
        >>   இவன்  >>   பிறைத்தமிழன் ..........!
-------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக