மொத்தப் பக்கக்காட்சிகள்
சனி, 18 டிசம்பர், 2010
காணும் போது கவி பிறக்கும்..கழிப்பறையும் பூ மணக்கும்
பிரிட்டனிலிருந்து பிறைத்தமிழன் பேசுகின்றேன்.. எழுத்து வடிவில்..
மேற்கத்திய கலாச்சாரத்தில் எனக்கு பிடித்தவை என்று சொல்வதை விட சரியென்று தோன்றக்கூடிய நிறைய விஷயங்கள் உண்டு. குழந்தைகள் வாலிபம் அடையும் வரை பொறுப்பதில்லை என்பது வேறு விஷயம், அதற்குள் பக்குவப்பட்டு விட்டோம் என்று அவர்கள் தீர்மானமாகிவிடுகிறார்கள்.இவ்விடத்தில் பருவத்தை தொட்டவர்கள் பிறரை சார்ந்து இருப்பதில்லை என்பது உண்மை, ஒருவன் ஒரு பெண்ணிடத்தில் நட்பு கொண்டிருந்தாலோ, ஒரு பெண் ஒரு ஆணிடத்தில் நட்பு கொண்டிருந்தாலும் இவர்கள் வயோதிகத்தை அடையும் போது தன் பிள்ளைகளையும் கூட சார்ந்திருப்பதில்லை. இதற்க்கு அடிப்படை காரணம் என்னவென்றால் இங்கே குழந்தைகள் பிறந்தவுடனேயே தனித்து கிடத்தப்படுகிறார்கள். அவர்கள் பேசவும், நடக்கவும் கற்றுக்கொண்ட மாத்திரத்தில் அவர்களுக்காண தேவைகளை கூட அவர்களின் அனுமதி பெற்றே நிறைவேற்றப்படுகிறது , இதன் மூலம் தன்னம்பிக்கை மற்றும் சுய சிந்தனையை உருவாக்குவதாக சொல்வது சரியென்று பட்டாலும் எனக்கு பிடித்தவை என்று ஏற்றுகொள்ள மாட்டேன். மனிதன் எப்பொழுதுமே ஏதாவது ஒன்றின் மீது தேவை உடையவானகவே இருக்கின்றான் .அவனுக்கு தேவையில்லாததும், அவன் விரும்பாததும் துன்பம் மட்டுமே . இன்பத்தை நேசிக்காத மனிதன் இருக்கவே முடியாது. அப்படி இருந்தால் அவன் மனிதனே இல்லை. சுயமாக சிந்திப்பவன் எளிதாக இன்பத்தை அடைய முற்ப்படுகிறான்.இவ்விடத்தில் , ஊரையும் உறவையும் நேசிக்காது ..தன்னை பற்றியே சிந்திந்து கொண்டிருப்பவனால் சமூகத்திற்கு எப்பலனும் இல்லை.
முறைப்படுத்தப்பட்ட உழைப்பும், அதற்க்கான முழு ஊதியமும் பெரும் இவர்களிடம் சேமிப்புக்கான சிந்தனை துளியும் இல்லை. மூன்றறிவு, நான்கறிவுள்ள உயிரினங்கள் கூட சேமித்து வாழ்கின்றன. ஆறறிவுள்ள மக்கள், அன்றாடம் மதுவையும்..மாதுவையும் கையாளும் விதத்தில் அவர்களுக்கு நிகர் அவர்களே..மனிதன் மதியை முழுமையாய் பெற்றதற்கான அடையாளமே ஆடை அணிவது தான். அந்த ஆடையை அறவே குறைப்பதும், அங்கங்களை வெளிப்படுத்துவதும்.. நவீன நாகரிகமாம். இது பெண் சுதந்திர கொள்கை விளக்கம். இவர்களின் கட்டமைப்புகளோ பிரம்மாண்டம் , காணும் போது கவி பிறக்கும்..கழிப்பறையும் பூ மணக்கும் ..சுத்தத்திலும் சிறப்பானவர்கள். இன்னும் இவர்கள் வெகுவாக கூறும் நன்றியும், வேகமாக கோரும் மன்னிப்பும்..இவர்கள் கலாச்சாரத்தில் தப்பி பிழைத்த ஒன்று .மனித உரிமை பண்புகளை உலகுக்கு கற்று தந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்து கொள்ளும் ஆங்கிலேய மக்கள் கலாசாரம் மற்றும் தனி மனித ஒழுக்கத்தை குழி தோண்டி புதைத்து விட்டு, நாங்களே நாகரிக உலகத்தின் நாட்டாமை என்று கிரீடம் சூட்டிக்கொள்கிறார்கள்.
இவற்றை ஒப்பிட்டு பார்க்காவிட்டாலும் இக்கட்டத்தில் என் தாய் நாட்டு மக்களை நினைவு கூர்ந்தே ஆக வேண்டும். இன்பமும் , துன்பமும் இயற்கையின் நியதி. ஏற்றத்தாழ்வுகள் மனிதனின் ஜாதி என்ற தத்துவம் அங்கே நிறைந்து காண படுகிறது . என் மக்கள், எல்லா நிலைகளிலும் பிறருக்காக வாழ்பவர்கள். அல்லது பிறரை சார்ந்து வாழ்பவர்கள். உதாரணத்திற்கு ஒரு பெண், குழந்தை பருவத்தில் தன் பெற்றோரை சார்ந்து இருக்கின்றாள். வாலிபம் எய்தி மன வாழ்க்கை காணும் போது தன் கணவனை சார்ந்திருக்கிறாள். வாழ்ந்து வயோதிகம் எட்டும் போது தன் பிள்ளைகளை சார்ந்திருக்கிறாள். இப்படி பல நிலைகளிலும் பிறரை சார்ந்தே வாழ்கிறார்கள் அல்லது பிறர் அவர்களை சார்ந்து வாழ்கிறார்கள்.இப்படிப்பட்ட என் தேச மக்கள் இன்பத்தில் கூட , எல்லை கடப்பதில்லை. துன்பத்தில் துவண்டு கொண்டிருப்பவனால், இன்பத்தை இறக்குமதி செய்ய முடியாது. சிறிதளவு மகிழ்ச்சி கூட அவன் சந்தோசத்தை இரட்டிப்பாக்கும் .அப்போது சமூகமே அவனுக்கு நேசப்பட்டு போகும் .அந்த சமூகத்தை காக்கும் கடமை தமக்கும் உண்டு என்பதை உளமார உணர்வான்.அங்கே கலாசாரம் காப்பாற்ற படும். மனித நேயம் மேலோங்கி அவர்கள் மேன்மைக்குரிய மக்களாய் போற்றப்படுவார்கள்.
( இவை அனைத்தும் நான் கண்ட உண்மையே தவிர ..வெற்றுப்புனைவுகள் அல்ல.)
இவன் பிறைத்தமிழன்
ஞாயிறு, 12 டிசம்பர், 2010
மனிதன்
இரத்தமும் சதையுமே
மனிதன். அவனிடம்,
சத்தமும் , யுத்தமும் ,
ஓய்வதோ கடினம்!
அணுவை பிளந்து ,
ஆய்வுகள் செய்து,
ஆக்கம் பல
கண்டான் மனிதன்!
அதனால்
தன் மெய் மறந்து,
உண்மை மறைத்து,
வன்மை பொதித்து,
நன்மை சிதைத்தான்
மனிதன்!
விளைவு
தூக்கம் தொலைத்து,
தூக்கம் தொலைத்து,
ஊக்கம் இளைத்து,
துக்கம் நிலைத்து,
தொலைந்தே போவான்
ஒரு நாள்!
ஒரு நாள்!
======================
இவன்>> > பிறைத்தமிழன்
சனி, 20 நவம்பர், 2010
மகரந்தம் சிதறாத " மல்லிகைப்பூ"
புலரும் பொழுதின் பூபாளமும் ,
தெளிர்ந்த நீரின் தெள்லோட்டமும் ,
குளிர்ந்த காற்றின் குதியாட்டமும் ,
விரிகின்றது காட்சியாய் கண்ணெதிரே !
இசைக்கின்றது , மெல்லிசையாய் காதருகே !!
என்னவளோ இதற்க்கு எதிர்மறை..!
சிந்தையை செந் தனலாக்கி,
சிரிப்பதுவை செவ் விதழில் காட்டி!
வண்ணம் தோய்த்த வெண்ணை மீது ,
கூர் தீட்டிய கொடுவாள் பாய்த்து !
அவள் வாழ்த்தும் மொழி வசை போல் இருக்கும்!
என்னை வீழ்த்தும் விழியோ வேல் போலிருக்கும் !
பூசும் மஞ்சள் அந்தி வெயிலாய் ,
சூடும் குங்குமச் சுடு நெருப்பாய் ,
வாடும் என்னை வன்மை தகிப் பாள் !
பள்ளியறை காணாத மெல்லிறகு மேனியவள் ,
மகரந்தம் சிதறாத " மல்லிகைப்பூ" கன்னியவள் !
புதிதாய் புலரும் பொழுதிலிருந்தே ,
புறப்பட்டு வருகிற பொற்க்கதிர் போலே !
அமைதி காக்கும் ஆழ்கடல் மேலே ,
ஆர்ப்பரிக்கும் அலைகளி னாலே ,
ஆடியடங்கும் நுரைகளைப் போலே
என்றாவது ஒருநாள் சாந்தமுருவாள்
நிச்சயம் அதிலே நான் சாந்தி பெறுவேன் !.. ============================================இவன் >> > பிறைத்தமிழன்
திங்கள், 15 நவம்பர், 2010
தியாகம்
மீண்டும் ஒருமுறை இவ்வுலகம் கட்டமைக்கப்பட்டு அதில்..
மனித இனம் தோற்றுவிக்கப்ப்படுமாயின் அப்போதும்..
நிலைத்து நிற்கும் தியாகம்
நிகழ்ந்த நாள் இன்று..
இப்ராஹீம் நபியின் கடினமிக்க இச்செயலை ..
கருணை மிக்க இறைவனால்..
ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் இன்று..
மனித இனம் உள்ள வரை மாறாது நிலைத்திருக்கும் ..
அளப்பரிய தியாகத்தை நினைவு கூறும் மக்களுக்கு..
என் இதயம் கனிந்த தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்..
இவன் பிறைத்தமிழன்
வியாழன், 11 நவம்பர், 2010
புதன், 10 நவம்பர், 2010
செவ்வாய், 9 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)