மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 7 ஜூலை, 2015

வாழ்த்து

 "இதயம் திறந்து"
  ============================
           இறைவனுடைய           சாந்தியும்,சமாதானமும் 
     எங்கெங்கும் நிறைந்தபடி !
     கண்ணியமிக்க  இரவது
     காண கிடைக்கின்ற,
     புண்ணியமிகு ரமளானின்
     பூரிப்பில் திளைத்தபடி !
     உழைக்கும் கைகளை,
     உயர்த்தி பிடித்தபடி !
     ஈகை திருநாளில் ,
    இதயம் திறந்தபடி!
    ஒருகோடி உவகைகள் 
     உள்ளத்தில் நிறைத்தபடி !
    ஈருலக ரட்சகனாம் ,
   எண்ணுடய இறைவனை
   இறைஞ்சி  கேட்டபடி !
இகத்தோர் யாவரையும்
பிறைத்தமிழன் வாழ்த்துகிறேன்
  பேதமைகள் அற்றபடி !!!!!!!!!  
   

2 கருத்துகள்: