கனவுகளின் நாயகன்
================
அணுவை மெருகூட்டி,
அக்கினி சிறகு பூட்டி!
அகிலத்தை அதிர வைக்க,
விண்வெளி தேரோட்டிய,
விந்தை மனிதரே!
படகோட்டி மகனாக
பாரினில் நீ பிறந்து,
உச்ச பதவிகளை அடைந்தாலும்
உத்தமனாய் தான் வாழ்ந்து
பாரதத்தின் தலை நிமிர்த்த
பாருலகம் வியக்குகின்ற
உண்ணத கனவுதனை
உள்ளமெல்லாம் விதைத்தவரே !
விண்ணை நீ அடைந்தாலும் ,
மண்ணை உயிர்ப்பிக்கும்
மழையாய் பிறப்பாயோ ? எனும்
இரங்கல் கவிதையினை எங்கள்
கரங்கள் வடித்தாலும் ,
இதயம் வலிக்கிறதே கண்ணீரை,
இமைகள் வடிக்கிறதே"!!!!!!!!!!!!
===========================
>>>இவன்: பிறைத்தமிழன்;<<<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக