விசத்தை ருசி பார்த்து ,
விசமத்தை வேரறுக்க !
அளவில்லா ஆனந்தம் பெருக ,
அன்பினால் இரு கண்களும் உருக !
என் சிந்தை யது சிறக்க ,
செந் தமிலே நீ வருக !
உன்னை ஊரு செய் ,
உன் மத்தர் தம் ஒழிக !
புசத்தை நே ருயர்த்தி ,
ஒரு புயலைத்தான் கிளப்பி !
விசத்தை ருசி பார்த்து ,
விசமத்தை வேரறுத்து !
இனி விடியல் நமக்கென்று ,
வெற்றியை நிலை நாட்டு !
என் தமிழே உன் போலே ,
அமுதும் கிடையாது !
மொழிப்போர் அறியாது ,
உனை மோதி அழிப்போர்
கரம் தரியாது என் ,
அலுவல் இனி ஓயாது !
எம் மக்கள் தோள் மீது ,
எகத்தாளமாய் தான் அமர்ந்து !
அவர்தம் இன்பத்தில்
இருள் தெளிக்க ,
இடுகின்ற கட்டளையில் ,
இறுமாப்பு குறையாத !
எங்கள் பகைவர் யாரென்று ,
இனங் கண்டே வேரறுக்க !
தமிழா பொங்கிப் புரையோடி ,
நமக்குள்ளே நாறுகின்ற ,
சாதிகள் ஒழியட்டும் !
சமத்துவம் பிறக்கட்டும் ! !
சுட்டெரிக்கும் சூரியனாய் ,
சுய மரியாதை ஒளிரட்டும் ...!
========================================
>>> இவன் : பிறைத்தமிழன் <<<
=======================================