மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

                          தீரா  நோயும் , ஆறா  துயறும் !  
-------------------------------------------------------------------------------------
    >>  இது யாரையும்  புண்படுத்த என்னாத ,
       புண் பட்டவனின்  ( கற்பனை ). <<<
------------------------------
-------------------------------------------------------

  சீருடை  அணிந்த   சிறப்புக் கொள்ளையர் !
                                                        அவர்  வாழ்வில் ,


 காக்கியும் , வெள்ளையும்   கலந்த  கும்மாளம் !
                                                                        அதெற்கென ,


சிவப்புக்  கோட்டையில்   செதுக்கிய  சிம்மாசனம் !
                                                                 அங்கே நடப்பது ,


  ஆயுள் முழுதும்  அதிகாரப்  பிச்சை ! அதை ,
                                                                   செயலாக்க ,


  கடைத் தெருவெல்லாம்     கப்பம்   வசூல் !  
                                                                                இந்த ,
  

அலுவலுக் கென ,புதுக் காரிலும் ,வேனிலும்   
   
                                                     கடமை  ஊர்வலம் !

  வெள்ளைத் துணிகளின்  வெகுஜனக் கரைகள் , 
                      சொல்லைக் கேட்டு  சுறு சுறுப்பாகி !

   கொள்ளை   என்ற        கொள்கைக்காக , 
     இல்லை  வரம்பு    இவர்களுக் கென்றும் ! 

   தினமும்  தேரும் ,எக்கச் சக்க  எச்சைத் தீனி !    
                                                                                    அதை

   உண்டு   பெறுவார் ,  ஓர்  ஆயிரம்   சாபம் ! 
                                                                       அதனால் ,


    வயிறு முட்ட  வளர்ந்திடாதோ  வஞ்சப்  புற்று ? 
            இப்படி    சந்தி  சிரிக்க,   தன் சந்ததி  சிறக்க ,


     சேர்த்து  வைத்த     செல்வம்    தானே ,
                    தீரா  நோயும் , ஆறா  துயறும் !  


    இவர்   தா னன்றோ   சீருடையணிந்த ,
                            சிறப்புக் கொள்ளையர் .....!!!
=============================================================
        >>> இவன் : பிறைத்தமிழன்                                                    
==============================
===============================

செவ்வாய், 30 அக்டோபர், 2012


>         " சில்லரைப்பசி "            
>   பிணம்  தின்னும்   கழுகுகளும்   தன்
>   இனம்    தின்னா  திருக்கக்   கூடும் !
>   பணம்   பண்ணும்   பாருலகோர்
>   பசி   என்றடங்  கிடுமோ  ?                          
>   இதயம்  இருன்டிருக்க,
>   இதழ்கள்  வறண்டிருக்க,
>   செயற்கைச்  சிரிப்பாலே
>   செருக் கங்கே    மறைந்திருக்க !
>   வஞ்சம் வளர்ப்பதிலே
>   வல்லமை  பெற்றோரின்
>   சில்லரைப்  பசி
>   சிறிதேனும்  குறையாதோ ?
>   கல்லறைப்  பயணமும்
>   காசொடுதான்  போவாரோ ?
>   பணத்தை  பையில் வைத்து ,
>   பலபேர்  கையில்  வைத்து !
>    உழைப்பே  ஒன்றுமில்லா ,
>   தொழிலொன்று தேர்தெடுத்து !
>   வருமைச் சுமை  கொண்டு ,
>   வருவோரை இனம் கண்டு !
> தேவைகளை தீர்த்துவைக்கும் ,
> தெய்வப்பிறவி தானென
>    வரவுமட்டும்  கணக்கிட்டு .
>    வட்டிஎன்ற பெயருமிட்டு !
>   சொத்துகளை  குவித்திடுவார் ,
>   செத்தபின்பும்  சீரழிய !
>   கட்டுகின்ற  கூத்துகளும் ,
>   கொட்டுகின்ற  மேளங்களும் !
>   பச்சை  ஓலையிலே ,
>   படுக்கையினை  செய்த பின்னே !
>   பட்டுச்    சரிகை என ,
>   பகட்டான  ஆடைகளும் !
>   விட்டுப்  பிரிந்திடுவார் ,
>   வேறு வழி  இல்லையென !
>   ஒட்டுத்   துணிகூட ,
>   ஒருவருக்கும்  சொந்தமில்லை !
>   உலகைவிட்டுச் செல்லும்முன் ,
>   உணர்ந்துகொள்  மானிடனே !
>   உயிர் குடிக்கும்  வட்டியினை,
>   உண்டு   நீ  வாழாதே  !
>   பிணம்  தின்னும் கழுகு என்ற ,
>   பெயரேதும்  வாங்காதே !!!
===============================================
   இது ஒரு
   வட்டியில்   மூழ்கி  வாழ்வை   தொலைத்தவனின்
   வயிற்றெரிச்சல்  ....................................................!
===============================================
>> இவன் :~  பிறைத்தமிழன் .

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

சிதைந்தது


பார்த்தேன்
               பலமுறை !

சிலிர்த்தேன்  
             சிலமுறை !

சிரித்தாள் 
              ஒரு முறை !

   சிதைந்தது   
         என் தலைமுறை !


படித்தேன்
    அவள் அழகினை !


வடித்தேன்
   ஒரு சிலையினை !


மொழிந்தால்
        தன் உறவினை !


வண்ணம் சூழ்ந்தது
      என் வாழ்வினை !


தொடுத்தேன்
               கணைகளை !


தொகுத்தேன்
                கலைகளை !

வகுத்தாள்
    வறை யறைகளை !

வாழ்ந்தோம் வாழ்வு
      அது பெருங்கலை......!!!


>>>>>>இவன் 
                      பிறைத்தமிழன்  <<<<<<


ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

புத்தாடை பூணி ,


  இதயம் கனிந்த ஈகைத்திருநாள் 
                   "வாழ்த்து ""
=================================
உள்ளங்கள்   
                       ஒன்  றிணைந் திருக்க !
 உயர்  ஈகை   
                      எங்கும்  பொழிந் திருக்க !
 உலகம்  
     ஒரு  கொடியின் கீழ்   நிலைத் திருக்க !
 வல்லோன்   வகுத்த  
          வான்  மறை   எங்கும்  செழித் திருக்க !
 மனித  னெனும்  
                              பிறவிக்  கடன் தீரா  திருக்க !
 மாநபி  உம்மத் தெனும்  
                                மகிழ்ச்சியும்  சேர்ந்திருக்க !
என்ன  தவம்  செய்தோமோ  
                                         ஏந்தல்  நபி  வழிநடக்க !
புத்தாடை  பூணி ,  ஃ பித்ராவை  பேணி  !
பிரத்யோக   வணக்கதிற்கே  இன்று
திரளுதாம்   தீன்குலப்  பேரணி !
-------------------------------------------------------------------------
அல்லாஹு  அக்பர் , 
அல்லாஹு  அக்பர் , 
அல்லாஹு  அக்பர்  !
லாயிலாஹ  இல்லல்லாஹு ,
அல்லாஹுஅக்பர்  !
அல்லாஹு  அக்பர்  ,
வலில்லாஹில்  ஹம்து   !!!
----------------------------------------------------------------------------
இவன்;பிரியமுடன் பிறைத்தமிழன்.........
நேர்  கொண்ட வழியில் ,
சீர்  பெற்றுச் செழித்து  , சிறப்புற்று  விளங்க

சிகரோனிடம்  சிரம்தாழ்த்தி , கரம் உயர்த்தி ,
வரம் கேட்டவனாக ( து ஆ செய்தவனாக )
நோன்புப் பெருநாளின் வாழ்த்துக்களை 

தீனுலகோருக்கு  தெரிவிப்பது
பிரியமுள்ள  :~  இவன்  >> பிறைத்தமிழன் <<----    

சனி, 21 ஜூலை, 2012

ஈருலக இரட்சகனை ,



===============================================================
 வாழும்  வழிதேடி ,
 வறுமையை  சுவைத்தபடி ! 
 வெற்று  காலோடு 
 விரைந்து ஓடுகின்றேன் 
 வேறெந்த  வழியுமின்றி ! 
 உழைக்கும்  கைகளை  
     உயர்த்திப்  பிடித்தபடி !   
     கண்ணியமிக்க  இரவது 
     காணக் கிடைக்கின்ற 
     புண்ணியமிகு ரமளானின் 
     பூரிப்பில் திளைத்தபடி!  
     ஈருலக   இரட்சகனை  , 
    என்னுடைய எஜமானை , 
    இறைஞ்சி  கேட்கின்றேன் , என் 
    இன்னலை  தீர்க்கும்படி!!!
=============================================================
இவன் >>> பிறைத்தமிழன் ;

புதன், 20 ஜூன், 2012

தொலைந்து போ துக்கமே !

                                                                                    
இன்பம்  எங்களின் எல்லை  கடந்து 
எளிதாய்ச்  செல்லும் போது
எரிக்கத்தெரிந்து  , எதிர்க்கத் துணிந்த
எங்களிடம்  "துன்பம் "

எத்தனை காலம்  இடிந்து  போகா திருப்பு க் 
கொள்ளல்  முடியும் ?
                                                                                             
தொலைந்து  போ  துக்கமே  !
மடிந்து போவோம் என
மனக்கோட்டை  கட்டாதே  !

உறுதியாய்  உன்னைத்  துரத்த
உண்ண மறுத்தும் , உறங்க  மறந்தும்
சடுதியாய்  அடைவோம்  விடியலை !
                                                                                               
உள்ளம்  அழுகின்ற  போது ,
உதடு சிரிக்கும்   போட்டியில்
உச்சப்பரிசு  பெற்றவர்கள்  நாங்கள்
!
எங்கள்   சட்டைப் பைகளில் ,
சில்லறை சேரா  சல்லடைக் கிழிசல்கள்
சகஜம்தான்  !        இருந்தும்  ,
                                                                                                         
எம் மக்களென்றும் ,
மக்கள் பெற்ற  மழலை என்றும் ,
உள்ளம் நிறைத்து  ஒய்யாரமாய்  அமர்ந்தபடி,

எங்கள் வீடு ,    வாசல்   நிறைத்து
வசந்தங்களாய்  வலம் வருது , அதில்
பல  வண்ணங்கள்  நிலை பெருது !
                                                                                                        
வறட்சியிலும்  வாழ்க்கை   இனிக்கிறது ,

வறுமையிலும்  பொறுமை  சிறக்கிறது !
இறுதியில்  நெறி நிறை  சீமானாக   இருந்து ,
இறைநெறி  ஈமானோடு  இறப்போம்  என்ற  

 நம்பிக்கை    பிறக்கிறது  ....! 
                                                                                                           
-------~: இவன் > பிறைத்தமிழன் :~------

சனி, 5 மே, 2012

பொறுமை >

  
தீங்கை  தீண்டாமல்  களைவது
============================================
  பண்பு >         அது ,  
பிறரிடத்துப் பேணும்  மனித  ஒழுக்கம் ...! 
பார்வை       அது ,    
பிரபஞ்சத்தை உருவகப்படுத்துவது ...!
 பிறப்பு >     அது ,     
இறப்பதற்கான  இன்றைய தயாரிப்பு ..!
பீதி >             அது ,     
அச்சத்தின் அடுத்தசகோதரன்...!
  புன்னகை >   அது 
 சத்தம் குறைந்த சந்தோசம்.....!
   பூக்கள் >       அது , 
தாதுக்களையும் , தாவரங்களையும் வேறுபடுத்துவது....!
    பெண் >          அது ,
ஆணில்    தோன்றிய  ஆணுக்கான  அற்ப்புதம் ...!
பேதமை >     அது ,  
 தாழ்வு தனை தனித்துவத்துடன் வேறுபடுத்துவது.... ! 
பைந்தமிழ்  >  அது ,
  மொத்தமாய்  செறிந்து , சிறந்த  முத்தமிழ் ...! 
பொறுமை >   அது , 
 தீங்கை தீண்டாமல்  களைவது ...!
 போர் >          அது  ,     
செயற்கைப் பேரழிவின்   செல்லப் பெயர் ...!
 பெளத்தம் >     அது ,
கடவுளுக்கான மனித முயற்சி ...! 
=============================================================
        >>   இவன்  >>   பிறைத்தமிழன் ..........!
-------------------------------------------------------------------------------------------------------------------