தீரா நோயும் , ஆறா துயறும் !
============================== ===============================
>>> இவன் : பிறைத்தமிழன்
============================== ===============================
------------------------------------------------------------ -------------------------
>> இது யாரையும் புண்படுத்த என்னாத ,
புண் பட்டவனின் ( கற்பனை ). <<<
------------------------------------------------------------ -------------------------
சீருடை அணிந்த சிறப்புக் கொள்ளையர் !
அவர் வாழ்வில் ,
காக்கியும் , வெள்ளையும் கலந்த கும்மாளம் !
அதெற்கென ,
சிவப்புக் கோட்டையில் செதுக்கிய சிம்மாசனம் !
அங்கே நடப்பது ,
ஆயுள் முழுதும் அதிகாரப் பிச்சை ! அதை ,
செயலாக்க ,
கடைத் தெருவெல்லாம் கப்பம் வசூல் !
இந்த ,
அலுவலுக் கென ,புதுக் காரிலும் ,வேனிலும்
கடமை ஊர்வலம் !
வெள்ளைத் துணிகளின் வெகுஜனக் கரைகள் ,
சொல்லைக் கேட்டு சுறு சுறுப்பாகி !
கொள்ளை என்ற கொள்கைக்காக ,
இல்லை வரம்பு இவர்களுக் கென்றும் !
தினமும் தேரும் ,எக்கச் சக்க எச்சைத் தீனி !
அதை ,
உண்டு பெறுவார் , ஓர் ஆயிரம் சாபம் !
அதனால் ,
வயிறு முட்ட வளர்ந்திடாதோ வஞ்சப் புற்று ?
இப்படி சந்தி சிரிக்க, தன் சந்ததி சிறக்க ,
சேர்த்து வைத்த செல்வம் தானே ,
தீரா நோயும் , ஆறா துயறும் !
இவர் தா னன்றோ சீருடையணிந்த ,
சிறப்புக் கொள்ளையர் .....!!!
>>> இவன் : பிறைத்தமிழன்
==============================