தூசி , புகை துளியுமின்றி , ஒரு
துயில் கலைந்த தூரத்து கிராமம் !
...........அங்கே
பனித்துளி போர்த்திய
பசும்புல் நுனி !
.....................அதில்
பரவசம் பொங்க
பாதம் பதித்தேன் !
ஒவ்வ மறுத்த
உள்ளுருப் பனைத்தும் ,
சில்லென்று சிலிர்த்து ,
சேதி யொன்றைச் சொன்னதே !
நகரத்து வீதிகளில் ,
நான் நடக்கும் போதெல்லாம் !
தகிக்கின்ற சாலைகள் ,
தார்ப் பாலை போலன்றோ !
அல்லும் , பகலும் ,
அனல் காற்று வீச !
உள்ளும் , புறமும் ,
உருகிய மேனி !
சொல்லும் , செயலும் ,
சோர்ந்தே போக !
வாழும் வாழ்வில் ,
வசந்தங்கள் யாவும் !
வந்து , வந்து போகின்ற ,
வண்ணக்கனவே !
...............என
சில்லென்று சிலிர்த்த மேனி ,
சேதி யொன்றை சொன்னதே !
சொர்க்கமாய் நகரத்தைச் சமைத்து ,
சுலபமாய் நரகத்தில் வாழ்வதை விட !
சுமைகளில் இருக்கின்ற ,
சோகத்தை தாங்கி !
சோகத்தை தாங்கி !
கடமைகள் நிறைவேற்றும் ,
கனவுகள் வேண்டி !
கனவுகள் வேண்டி !
கானகமும் ,காடுகளும்
விதை இட்டு மிதிக்கின்ற ,
தடமாகும் !
............. அதில் ,
நட்பென்றும் , கற்ப் பென்றும் ,
விளைகின்ற நாற்றுக்கு
விதை இட்டு மிதிக்கின்ற ,
தடமாகும் !
............. அதில் ,
நட்பென்றும் , கற்ப் பென்றும் ,
விளைகின்ற நாற்றுக்கு
இடுகின்ற உரமாகும் !
.............அதுவே
.............அதுவே
தேவையும் , தேடுதலும் ,
கிடைக்கப் பெறுகின்ற
கிடைக்கப் பெறுகின்ற
உயர் கிராமத்துக்
களமாகும் ..........!!!
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இவன் >>> பிறைத்தமிழன்