மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

* முடிவற்ற சுழற்ச்சி *

      மகரந்தம் சிந்தா மலர்      
 ======================
    மமமமமமமமம         
மமமமமமமமமம
    மமமமமமம    
    மமமமமமமமமம   
    மமமமமமமமமம    
    மமமமமமமமமம    
   மமமமமமமமமமம  
======================================
மல்லிகை > அது 
மகரந்தம் சிந்தா மலர் .................................!
மார்கழி > அது
மணம் சிலிர்க்கும் குளிர் ..........................!
மின்னல் > அது
மேகம் கிழிக்கும் வாள் ...........................!
மீன் > அது
வான் அளக்கும் கோள் ............................!
முகம் > அது
முன்னவர்களின் அடையாளம் ................!
மூப்பு >;அது
முடிவுக்கான முடிவற்ற சுழற்ச்ற்சி.............!  
 மெட்டு >:அது
சங்கீத  ஒலிகளின்  சாரம்..............................!
 மேன்மை > அது
மெருகுடை பொருளின் மிகைத்தல் ..........!
மையல் > அது
சிதறலற்ற உணர்வுக் குவியல் ..................!
மொட்டு > அது
மலர்களின் மகரந்தக் கருவறை ................!
மோகம் > அது
அளவற்ற ஆசைச் சிதறல் .............................!
மெளனம் > அது
பிணக்குகளை பிற்ப்படுத்தும் யுக்தி .........!
ம்................> அது
இதழ் பிரியா இசைவு...................................!
----------------------------------------------------------------------
இவன் :பிறைத்தமிழன் .

புதன், 25 ஜனவரி, 2012

* இரும்ம்புத் தடம்பதித்து *


          அறுபத்தி மூன்றாவது கொடிமுழக்கம்            

பசுமைமிக்க பாரதத்தின் ,
உரிமைமிக்க சமுதாய ஒன்றிணைந்த 
குடியரசுதின கொள்கை முழக்கம் !

உறக்கம் திரையிட்டு ,
உணர்வைக் கூர்தீட்டி ,
* இரும்ம்புத் தடம்பதித்து *

எழுந்துவரும் இளஞர்களால் ,
எம்  இந்திய தேசமே 
எல்லைகடந்து ஒளிரட்டும் ...!!!
--------------------------------------------------------------------
  இவன் >>   >> பிறைத்தமிழன் 

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

*ஒடிந்த சிறகுகள் *



                             தூங்கா    இரவுகளில் ,
                             துடிக்கும்   பறவையின்
           
ஒடிந்த   சிறகுகளிள்  

               உதிரும்   இறகுகளே..........

               என்   நினைவுகள் ...!
                           முகிலில்   சிக்கிய  !
                           முழு  நிலவைப்போல் 
                           மூடிய   இரவில் , முகவரி   தேடி ,
                           முகம்  தொலைத்த  பின் !

                           இயக்கத்தை  வெறுக்கும்
                           இறுகிய   இதயம் ,
                           இளகிப்  பூரிக்காதோ  ?
                           இடியும் , மின்னலாய்
                           இரைச்சலோடு   இன்பம் 
                           இன்றே  துவங்காதோ   ?

                           களங்கிய  விழிகளில்
                           கசிகின்ற  நீரால் ,
                           காயங்கள்  ஆற்றி
                           கவலைகள்  கரையாதோ  ?
                           காலத்தின்   கை விரல்
                           கண்ணீர்   துடைக்காதோ ?

                           தன்னுடல்  வறுத்தி
                           வெண் குருதி  புகட்டி
                           கண்ணென  காத்து 
                           என்னுயிர்  வளர்த்த
                           மன்னகத்  தூடே
                           மானிட   சொர்க்கம் 

                           அமைதியின்  வடிவே
                           அன்னையின்  மடியே
                           என்னைத்  தாங்கிட , 
                           இனிமேல்    வாராதோ  ?
                           இடர் மிகு   துயர்கள்
 
                           என்னில்     முழுதாய்
                           என்றென்றும்     தீராதோ  ? 

    இவன்  >>>    >>>  பிறைத்தமிழன்.........!!!!

சனி, 14 ஜனவரி, 2012

வெற்றிகளும் , விருதுகளும்


 

            
                                           உழவன் வாழ்க  

   வான் அழ  மண் சிரிக்கும் ,
   மண்  செழிக்க  மனு  சிறக்கும்  !
   ஊன்  தர  உழவு  செய்யும் ,
   நான் போற்றும்  நல்    உழவன்  வாழ்க  !
   மழையில்   நனைந்து ,
   வெயிலில் உலர்ந்த போதும் ,
   கூன்  விழுந்து , குடல்  சிறுத்து , வறுமை
   குப்புறத்  தள்ளிய போதும் ,
   தேகம்   உருக்கி , த்யாகம்  நிகழ்த்தி ,
   முப் போகம்  பெருக்கிடும்  தமிழா
   இவ் வுலகம்  உய்யுது  உன்னத மிக்க
   உயரிய தொழிலாம்  உன்தன்  உழவால் !
   உழவனும் ,தமிழனும்  ஒன்று  ! இதை
   உலகம்  உறக்கச்  சொல்லனும்  என்று
   உழவுக்கான  தொழிலுக்கே  வந்தனை  செய்வோம் ,
   உழவற்ற  தேசத்தை  நிந்தனை  செய்வோம் !

             வெற்றிகளும் ,    விருதுகளும் 
            விழாக்களாய்   வியாபித்திருக்கும்  சமூகத்தில் 
             வலிகளையும் , வடுக்களையும்  சுமந்து கொண்டு 
             வாய்க்காலும் , வரப்புமாய்   வகைப்படுத்தி , 
             வயல் வெளியெங்கும்   வாழ்வாதாரப் படுத்தும் 
             வண்ணத்தமிழ்    உழவன்  
             விண்ணைத்தொடும்  சிறப்புடன்                     
              வாழ்க !வாழ்க!! வாழ்கவே !!!
                எனச் சூளுரைக்கும் பிறைத்தமிழனின் 
                உலகனைத்  தமிழர்களுக்கு உளமார்ந்த , 
                உழவர்  திருநாள்  வாழ்த்துக்கள் !!!
-------------------------------------------------------------------------------------           

                          இவன்  >  >> பிறைத்தமிழன்                    

சனி, 31 டிசம்பர், 2011

* உணர்வை கூர் தீட்டி *


   இயற்கைப்  பேரிடர்  அற்ற 
   இரண்டாயிரத்துப்  பன்னிரண்டு
   இனிதே  துவங்கட்டும்  ! 
   இகத்திலுள்ள  எல்லா  உயிர்களும்
   இன்புற்று  வாழட்டும்  !! 
                         உறக்கம்  திரையிட்டு  
                         உணர்வை  கூர் தீட்டி
   இரும்புத்  தடம் பதித்து  எழுந்து வரும்  

   இளைஞர்களால்
   இந்திய  தேசம்  ஈடு  

   இணையற்று  ஒளிரட்டும்  !!! 
                      என்றெண்ணிய  பிறைத்தமிழனின்  
   இனிய
                       புத்தாண்டு  நல்  வாழ்த்துக்கள்  .... 
-------------------------------------------------------------------------------
    இவன் >>  >> பிறைத்தமிழன்

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

டிசம்பர் " 26 " 2004



கண்ணீர் வடு

சொல்லாமல் தாக்கிய சுனாமி பேரலையே..நீ
கொல்லாமல் விட்டு சென்றது  
கொடுமை மிகு நினைவுகளே !
கோடிக்கரம்..தொட்டு துடைத்திட்ட போதிலும், 
விழி வடித்த கண்ணீர் வடு பெற்றுப்போனதே ! 
கோட்டை கொத்தளங்கள் ..கொட்டி சாய்ந்தாலும், 
ஓட்டை உடைசல்கள் ..உயிர் வாழ போதுமே !
ஆண்டுதோறும்  மீண்டும் ,மீண்டும் 
நினைவுறா  வரம் வேண்டி !
இனி ஒரு இருபத்தாறு இல்லாத டிசம்பராய்,
தனி ஒரு தினசரி தயார் செய் மானிடனே ! 
உயிரற்ற மனிதக்குவியலை 
ஒற்றைச்ச்சமாதியிட்ட, ஓங்கார பேரலையே ! 
உனக்கு கட்டளையிட்டவனே.. 
எங்கள் கண்ணீரை துடைக்க வேண்டும் !
அடைக்கலம் புக வழியில்லை ! 
ஆலயங்கள் போத வில்லை ! 
ஆகாயம்  பார்த்தும் பயனில்லை !
ஆறா துயரின்னும் தீரவில்லை !
இனிய வருடம் தொடங்க வேண்டும் !
இன்பம் இதயத்தை வருட வேண்டும் !
இறைவனே ...உன் துணை வேண்டும்  ! 
என நனைந்த  இமைகளுடன் ,
நான் >> பிறைத்தமிழன் ...


ஞாயிறு, 6 நவம்பர், 2011

இரத்தமோ ,மாமிசமோ ,


பசி ,உறக்கம்  அற்றவனும் ,
பால்  பாகுபாடுகளுக்கு  
அப்பார்ப்பட்டவனும்
யாரையும்  பெறாத ,
யாராலும்  பெற்றெடுக்கப்  படாத  
தனித்தவனும் ,எத் தேவையும்  அற்றவனும் ,
எல்லோருடைய  தேவைகளையும்
பூர்த்தி  செய்பவனும்  ஆகிய 
எல்லாம்  வல்ல  அல்லாஹ்வுக்கு
நாம் அறுத்து  பலியிடும்  
பிராணியின்   இரத்தமோ ,
மாமிசமோ  சென்றடைவதுமில்லை ,
அதன் மீது  இறைவனுக்கு  
எத் தேவையுமில்லை ! 
இதன்மூலம்  மனிதனின் உள்ளம்  
தியாகத்தை  உணரவும் ,
தியாகங்கள்  செய்யவும் ,
தியாக  நாளை  நினைவு  கூறவுமே !
மீண்டும்  ஒருமுறை  இவ்வுலகம்  
கட்டமைக்கப்பட்டு  அதில்..மனித  இனம்  
தோற்றுவிக்கப்ப்படுமாயின்  அப்போதும்..
நிலைத்து  நிற்கும்  தியாகம்  
நிகழ்ந்த  நாள்  இன்று !இப்ராஹீம்  நபியின்  
கடினமிக்க   இச்செயலை ..
கருணை  மிக்க  இறைவனால்..
ஏற்றுக்கொள்ளப்பட்ட  நாள்  இன்று !
மனித  இனம்  உள்ள வரை  
மாறாது  நிலைத்திருக்கும் !
அளப்பரிய  தியாகத்தை  
நினைவு கூறும்  மக்களுக்கு ,
என்  இதயம்  கனிந்த  
தியாகத்திருநாள்  வாழ்த்துக்கள் !!!
--------------------------------------------------------------------------------------
இவன்  >>  >> பிறைத்தமிழன்